Friday, April 24, 2020

First train in Kumbakonam

அப்பாவின் சிறுவயது குறும்பு:-

அப்பாவுக்கு அப்போது வயது 8 இருக்கும்.

திம்மக்குடியில் அவர்கள் விளையாடி கொண்டிருக்கும் போது...  இனி அப்பா தொடர்வார் ...

ஏய்! கும்பகோணத்தில் ரெயில் விட்ருக்காங்களாம்டா ..
நம்ப போய் பார்க்கலாமா?  ஆனா ரூட் தெரியாது என்று ஒருவன் முடிப்பதற்குள், என்னோட வாங்கடா எனக்கு ரூட் தெரியும் என்று எல்லா குழந்தைகளையும் ரெயில் பார்க்க, ரெயில் வண்டி போல் வரிசையாக, ஓட்டமும், நடையாக கும்பகோணம் அழைத்துக்கொண்டு போனேன்.  ரெயில் நிலையமும் அடைந்தோம். எல்லாரும் உற்சாகமாக வரதா( அப்பா பேர்) ரெயில் வருது போலருக்குடா  , ரொம்ப குஷியா இருக்கு என்று சொன்னார்கள். அவர்களுக்கு கும்பகோணம் வந்த குஷி.


ரெயிலும் வந்தது, நாங்கள் எல்லாரும் ரெயிலுக்கு "டாடா" காட்டி விட்டு திருப்பினால் எங்களையே முறைத்து பார்த்து கொண்டு TT நிற்கிறார். எல்லாரும் எங்கேருந்து வந்திருக்கிறீர்கள், எங்கே உங்கள் Platform டிக்கெட் என்று கேட்டார்? எல்லாரும் திருதிருனு முழிச்சுண்டு இருக்கும்போது நான் மட்டும் நாங்கெல்லாம் திம்மக்குடிலேர்ந்து ரயில் பார்க்க வந்தோம் ஆனா டிக்கெட் எடுக்கலை என்றேன். உடனே TT , சரி எல்லாரும் 50 தோப்புக்கரணம் போடுங்கள் என்றார்...

அனைவரும் 1, 2 , 3 என்று கணக்கு பண்ண நான் மட்டும் 1, 3, 5 என்று தோப்பு கரணம் விட்டு விட்டு போட்டு முடித்தேன். ஒரு வழியாக, ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்தோம்.

கும்பகோணம் அக்ரஹாரம் வரைக்கும் சரியாக வந்த நான் போகும் வழியை மறந்து விட்டேன். என்னடா வரதா! மறுபடியும் மறுபடியும் ஒரே ரோட்டுக்கு வர என்கிறார்கள் எல்லாரும். ஆமாம்டா ரூட் மறந்து போய்ட்டேன்டா என்று சொன்னேன்... சில பேர் அழ ஆரம்பித்து விட்டார்கள் ... நானும் எவ்வளவு முறை முயற்சித்தாலும் மெயின் ரோடு வரமாட்டேங்கறது.

அப்போது நல்ல வேலையாக எங்க ஊருக்கு வரும் மாமா என்னடா திம்மக்குடி குழந்தைகளா, நீங்க எல்லாரும் இங்கேயா இருக்கீங்க? அங்க திம்மக்குடியே அல்லோலக படறது உங்களை எல்லாரையும் காணம தேடிண்டு என்று சொல்லி, வாங்க என் பின்னாடியே என்று திம்மக்குடி அழைத்து கொண்டு போனார் .

திம்மக்குடி எல்லையிலேயே யாரடா எல்லாரையும் கூட்டிண்டு போனா என்று கேட்க எல்லாரும் கோரஸாக "வரதன்" தான் என்று சொல்ல, ஒரு மாமி ஓ! சீதா புள்ளையா? வா உங்க அம்மாகிட்ட சொல்லறேன் என்று என்னை இழுத்துக்கொண்டு போக அன்று முழுக்க எனக்கு அர்ச்சனைதான்.

இன்னும் நிறைய  சுவாரசியங்கள்..... வரும்.....





No comments:

Post a Comment