Tuesday, May 19, 2020

Short Story on Diwali.... Impact of last post :)

தீபாவளியும் கோ லைவ்வும்...

பொற்கொடி நல்ல தமிழ் பெயர்..... இவர்தான் நம் கதாநாயகி. இவர் ப்ராஜெக்ட் மானேஜராக ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலையில் இருக்கிறார்.
பொற்! ப்ராஜெக்ட் ஷுட் கோ லைவ் 20th அக்டோபர். சோ ஜஸ்ட் டூ தி டெவலப்மென்ட் பாஸ்ட். வி நீட் டு டெலிவர் இட் ஆன் டைம் என்றார் ப்ராஜெக்ட் டைரக்டர்.
ஸுயூர் சார் என்று சொல்லி வெளியே வந்தாள் பொற்.

டீம் மீட்டிங் அர்ரேன்ஜ் பண்ணி அனைவரிடமும் விஷியத்தை சொல்லி., இன்னும் 15 நாட்களே இருக்கிறது... ஸ்டாண்டப் கால் வில் பி பிரம் மீ பார் 10-15 மினிட்ஸ் டெய்லி. வி நீட் டு கிவ் அவர் 100% டு மேக் திஸ் ப்ராஜெக்ட் success! என்றால் பொற்.


கைபேசி சீனுகியது .... அரவிந்த், பொற் கணவர்.... சொல்லுமா என்றாள். எனக்கு இன்னிக்கு லேட்டா ஆகும். குட்டிமாவை ( இவர்களின் செல்ல மகள் சஞ்சனா - மூன்று வயது )கிரஷ்லர்ந்து கூப்பட முடியாது என்றான்.
சரி பரவாயிலை நான் என் பிரெண்டு ப்ரியாவை அனுப்பி கொஞசம் கூட்டிண்டு வர சொல்லறேன், ஏன்னா எனக்கும் இங்க வேலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. Project கோ லைவ் 20th என்றாள்.
சரி முடியுமா இல்லேன்னா சொல்லு நான் போக முடியுமான்னு ட்ரை பண்ணி பார்க்கறேன் என்றான்.
நோ நோ... ஐ வில் டேக் கேர் என்று சொல்லி மொபைலை கட் செய்து ப்ரியாக்கு போன் பண்ணி பார்க்கலாம் என்று டயல் செய்வதற்குள் அண்ணா பண்ணினார்.
பொற் நான் பெங்களூரு வந்திருக்கேன்.... நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு.
அண்ணா நான் ஆபீஸ்ல இருக்கேன் நீங்க குட்டிமாவை கிரஷிலேர்ந்து கூட்டிட்டு வீட்டுக்கு போய்டுங்க., நான் வர லேட்டா ஆகும். பிரிட்ஜ்ல மாவு இருக்கு., தோசை ஊத்தி சாப்பிட்டுக்கோங்க என்றாள். சரிம்மா நான் பார்த்துக்கறேன் என்றார். சாவி எங்க இருக்கு என்றார். எப்போதும் போல பக்கத்துக்கு வீட்டில ஒரு கீ இருக்கு அண்ணா என்றாள்.
பொற் வீட்டுக்கு வரவே 11 மணி ஆகி விட்டது. குழந்தை தூங்கி போயிருந்தாள். அரவிந்த் இன்னும் வர வில்லை. என்னடா ரொம்ப வேலையா என்று பரிவுடன் கேட்ட அண்ணாவை பார்த்து ஆமாம் அண்ணா நீங்க சாப்டீங்களா சென்னைல எல்லாரும் எப்படி இருக்காங்க என்றாள்.
அரவிந்துக்கு கால் பண்ணினாள்.... பொற் மார்னிங் ஆயிடும் நான் வர என்றான். ஓகே குட் நைட் என்று சொல்லி போனை வைத்தான்.
காலை எழுந்து பார்த்தால் அண்ணா காபி போட்டு கொண்டிருந்தார்... ஏண்ணா நீங்க பண்ணிட்டு நான் பண்ண மாட்டேன்னா என்று சொல்லி கொண்டே காப்பியை பருகினாள்.


பொற் தீபாவளிக்கு என்ன பிளான் எப்போ வர்றேங்க என்றார். தெரியலை அண்ணா ஆனா ஒரு விஷயம் எனக்கு கோ லைவ் 20th அதனாலே ப்ராஜெக்ட் தீபாவளிக்குள் முடிஞ்சிடும் அரவிந்தும் ஓன் வீக்ல பிரீயாகிடுவார் ... ஒரு வாரம் லீவு போட்டுட்டு வந்துடறோம் என்றாள்.
அப்போ ஒன்னு பண்ணறேன் பொற்., பேசாம்மா குட்டிமாவை நான் ஊருக்கு கூட்டிண்டு போய்டறேன்... அவளும் அந்த பாட்டி இந்த பாட்டி என்று ஒரு 15 நாட்கள் இருக்கட்டுமே  (இரண்டு பேர் வீ டும் பக்கத்து பக்கத்து வீடு).... இங்கு உனக்கும் அரவிந்துக்கும் இப்போ வேலை ஜாஸ்தி... குழந்தை பாவம் என்றார் அப்பொழுது அரவிந்தும் ஆமாம் பொற் எங்க அம்மாகூட குட்டிமாவை சென்னை அனுப்பு, தீபாவாளிக்கு வரும் பொது கூட்டிண்டு போங்கனு சொன்னாங்க என்றான். சரி நம்பத்தான் 4 நாளுக்கு முன்னாடியே போகப்போறோம் என்று அண்ணாவுக்கு சரி என்றால்... குட்டிமாவும் குதித்து கொண்டு போய் விட்டாள்.
ஆபீஸ் பரபரப்பு.... மெயில் செக் பண்ணினால் கிளைன்ட் கால் அட் 11 என்று இருந்தது. சின்ன சின்ன மாற்றங்கள் சொன்னார்கள். நாங்களும் அதை மாற்றி செய்தோம். கிளைன்ட் கால், டீம் கால், என்று நேரம் தவிர ப்ராஜெக்ட் அப்டேஷன் என்னுடைய வேலை என்று ரொம்பவே ஓய்வு இல்லாமல் வேலை இருந்தது.
இப்படியே ஒரு வாரம் போனது.. கோ லைவ் இன்னும் 4 நாட்களே இருக்கும் பட்சத்தில் 40% ஒர்க் மாற்ற சொன்னது இன்னும் டீம் மெம்பெர்ஸ் இடையே ஏரிச்சலை தந்தது... பொற்! நம்ப எவளோ குறுகிய நாட்களா இந்த ப்ராஜெக்ட் கோ லைவ் பண்ண முடியாது சோ எக்ஸ்ட்டென்ஷன் வேண்டும் என்றார்கள்.
பொற்கு இந்த ப்ராஜெக்ட் எப்படியாவது சக்ஸஸ் பண்ணனும். சக்ஸஸ் பண்ணினா 4 வருஷம் ப்ராஜெக்ட் இந்த கம்பனிக்கு சைன் ஆயிடும் என்று தெரியும்.
பொற் ப்ராஜெக்ட் டைரக்டரிடம் இது பற்றி பேசினாள். தேதி மாற்றம் வேணும் சார் கோ லைவுக்கு என்றாள். நெறைய மெயில் சைனுக்கு பிறகு 26 அக்டோபர் கோ லைவ் என்று தீர்மானம் ஆனது.
பொற்க்கு ஒரு பக்கம் கோ லைவ் இன்னொரு பக்கம் தீபாவாளிக்கு ஊருக்கு போகணுமே என்ற டென்ஷன். 26th கோ லைவ் முடித்து எப்படி 27th தீபாவளிக்கு ஊருக்கு போக முடியும் என்று கவலை. ஆனால் வேலை டென்ஷனில் தீபாவாளி பற்றி நினைப்பை மறந்தே போனாள்.
அரவிந்த் தீபாவளிக்கு டிக்கெட் புக் பண்ணறேனு சொன்னபோது கூட பதில் சரியாக சொல்லவில்லை ஏன்னா ப்ராஜெக்ட் சக்சஸ்புல் ஆகணும்னு வெறியில் வேற எந்த நினைப்பும் இல்லை.
டீமுக்கு நிறைய ஊக்கம் கொடுத்தாள். நியூ ஐடியாஸ் நிறைய பகிர்த்தாள். 26th நெருங்க நெருங்க இரவு பகல் பார்க்காமல் வேலையில் மூழ்கினாள்.
26th கோ லைவ் ஸ்டார்ட் ஆனது.... ஒவ்வொன்றாக விவரித்து கொண்டே போனாள். கிளைன்ட் பக்கத்துலேருந்து பெரிய கைத்தட்டல் கிடைத்தது. ப்ராஜெக்ட் சக்சஸ் என்று என் ப்ராஜெக்ட் டைரக்டர் பிக் applause டு யு பொற் என்றார். Thank You சார் என்று சொல்லி விட்டு தன் டீம் மெம்பெர்ஸுக்கு நன்றியையும் பிக் பார்ட்டி ப்ராமிஸ் என்று ஊக்கம் கொடுத்து மெயில் செய்து டைம் பார்க்கையில் மணி இரவு 12. அம்மா அத்தை போன் செய்த போது கூட போன் எடுத்து பேசவில்லை.
நாளை காலை தீபாவளி. பொற்க்கு வீட்டு நினைப்பு வந்தது. பிளைட்ல டிக்கெட் செக் பண்ணினாள் மார்னிங் 9 மணி பிளைட் தான் இருந்தது.என்ன பண்ணறது என்று யோசித்தபடி காரை வீட்டுக்கு ஓட்டினாள்.


அரவிந்துக்கு போன் செய்தாள்.
சொல்லுடா பொற் ... என்ன ப்ரோஜெக்ட் லைவ் எப்படி போச்சு? successah என்றான்.
ப்ராஜெக்ட் டபுள் சக்ஸஸ்த்தான் அரவிந் ஆனா நம்ப ஊருக்கு போக முடியாதே அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு என்றாள்.
கவலை படாதே வீட்டுக்கு வா என்று சொல்லி போனை வைத்தான்.
பொற் வீட்டுக்குள் நுழையும் போதே வீடு லைட் அலங்காரம் பண்ணி பிரகாசமாக இருந்தது. ... அரவிந்தா இவ்வளோ பண்ணி இருப்பான் என்று எண்ணி கொண்டே போன அவளுக்கு ஒரே ஆச்சரியம்.! வீட்டுக்குள் அம்மா, அப்பா, அத்தை, மாமா, அண்ணா, அண்ணி, குழந்தைகள் என்று அனைவரும் இருந்தார்கள். குட்டிமா ஓடி வந்து கட்டி கொண்டாள்.
எல்லாம் அரவிந்த் பிளான் தான் பொற் என்று அப்பா சொன்னார். நாங்க எல்லாரும் மத்தியானம் வந்துட்டோம். உனக்கு surprise.
பொற் அரவிந்தை ஆனந்த கண்ணீர் மல்க wonderful ஐடியா. Thank you என்று சொன்னவளுக்கு, கூல் என்று சொன்னான்.


அனைவரும் ஹாப்பி தீபாவளி என்று கோஷம் போட்டார்கள்.
கல்யாணி கிருஷ்ணன்
9989237712
சுபம்.

நான் பார்த்த தீபாவளி...


பாட்டி அந்த வயதிலும் உற்சாகம் குறையாமல் தீபாவளி தேதியை பார்த்து இன்னும் தீபாவளிக்கு எத்தனை நாள் இருக்கிறது என்று கணக்கு செய்வாள் . பாதி நாட்களை விட்டுவிட்டு இன்னும் ஒரு வாரம்தான் என்று சொல்லுவார். அப்படி ஒரு உற்சாகம். அனைவரும் சேர்ந்து அப்பாவுடன் தீபாவளி டிரஸ் எடுக்க செல்வோம் . முதலில் தாத்தா பாட்டிக்கு பின் எங்களுக்கு. அப்பாக்கு டிரஸ் எடுத்துக்கொண்டதாக ஞாபகம் இல்லை. பேபி அத்தைக்கும் புடவை எப்பொழுதும் எடுப்போம் . தி. நகரில் டிரஸ் அதை அடுத்து கண்டிப்பாக சரவணா பவன் ஹோட்டல் பேப்பர் தோசை, ஆப்பம் சட்னி, தாத்தா பாட்டிக்கு ஐஸ்கிரீம். ஆட்டோவில் வீடு வந்து சேர்வோம் . எனக்கு வெளியில் போனால் தாகம் எடுத்து விடும் ஜூஸ் குடிக்கத்தான்.....எல்லாரும் வீட்டிற்கு வந்து ட்ரெஸ்ஸை மறுபடியும் பார்த்து எப்பொழுது தீபாவளி வரும் என்று காத்து கொண்டு இருப்போம். பேபி அத்தைக்கு எப்பொழுதும் வாங்கிய புடவையை மறுபடியும் போய் மாற்றினால்தான் திருப்தி ஆனால் அந்த புடவை முதலில் வாங்கிய புடவையை விட மங்கலாக இருக்கிறது என்று என் பாட்டியிடம் இருந்து திட்டு வாங்கி கொள்வாள் . பாட்டி எப்பொழுதும் காலை வெளிச்சத்தில் புடவை பார்க்கவேண்டும் என்று வெய்யிலில் வைத்து பார்ப்பார். அவ்வளவு  ஆசை. நாங்கள் எல்லா காலனி பெண் குழந்தைகளும் அக்காக்களுடன் ட்ரெஸ்ஸுக்கு மேட்சாக தோடு, கிளிப், வளையல், பொட்டு என்று வாங்க மார்க்கெட்டில் இருக்கும் காஸ்மெடிக்ஸ் கடைக்கு போவோம். மழை இருந்தால் கூட குடை பிடித்து கொண்டு..... அப்பொழுது நதியா ஸ்டைல் ரொம்ப பேஷன்.



என் அம்மா எல்லா பட்சணமும் சாஸ்திரத்துக்கு செய்வாள். அம்மாவுக்கு எண்ணையில் நின்றால் தலைவலி வயற்று குமட்டல் வந்துவிடும் என்று அப்பா ரொம்ப பலகாரம் செய்யவேண்டாம் என்பார் . எங்கள் காலனி மாமி ஒருவர் பின் ஒருவராக பட்சணம் செய்முறை ஆலோசித்து பேசி கொள்வார்கள் இடையே சரியாக வரவில்லை என்றால் அம்மா மற்றவர் வீட்டுக்கும் அவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்து பக்ஷணம் உதவி செய்வார்கள். இதற்கு இடையில் என் தாத்தாவுக்கு அரை வேக்காட்டில் முறுக்கு எடுத்து கொடுக்க சொல்வார் . பல்லில் கடிக்க லோகுவாக இருக்கும்.


பட்டாசுக்கு எங்கள் அண்ணா தான் லிஸ்ட் போடுவார். எனக்கு வெடி என்றால் பயம்.அண்ணாவும் அக்காவும் குருவி வெடி, லட்சுமி வெடி, அட்டோம் பாம் சரம் என்று லிஸ்ட் போடும் போது நானும் என் பங்குக்கு ஊசி வெடி, பாம்பு மாத்திரை , பென்சில் சாட்டை என்று சொல்வேன் . அப்பொழுது  எல்லாம் பட்டாசு கடை நவராத்ரி முடிந்தவுடன் திறந்து விடுவார்கள்.இதுல என்ன வேடிக்கை என்றால் யார் வீட்டில் அதிகம் வாங்கியிருக்கிறார் என்ற போட்டி நடக்கும் . எங்க வீட்ல 150 ரூபாவுக்கு வாங்கிட்டோம் உங்க வீட்ல என்று காம்பரிசன் வேற!.தீபாவளி முதல் நாள் பால் பாயசம் பஜ்ஜி , வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி தான் மாற்ற படாத மெனு . கொஞ்சம் மத்தாப்பு பட்டாசு முதல் நாள் இரவுக்கு, தீபாவளி அன்று நிறைய என்று பிரித்து கொள்வோம் . தீபாவளி அன்று யார் முதல் மத்தாப்பு கொளுத்துகிறார்கள் என்ற போட்டி வேற...


விடியற் காலை பார்க்காத நாங்கள் 3 மணிக்கே எழுந்து விடுவோம். அம்மா ஒரு பலகையில் கோலம் போட்டு அதில் எஙகளை உட்கார சொல்லி முதலில் தாத்தா பின் பாட்டி அப்பா அம்மா என்று அனைவரும் தலையில் எண்ணெய் வைப்பார்கள் ( காய்ச்சின எண்ணெய் ). அதில் என் தாத்தா அழகாக மூன்று விரலில் எண்ணெய் எடுத்து நாசுக்காக வைப்பார், ஏன் என்றால் அனைவரும் எண்ணெய் வைத்து அதிகமாகிவிடுமோ என்று. அனைவரின் புத்தாடையும் ஸ்வாமி முன்னாடி சந்தனம் குங்குமம் வைத்து பாட்டி நாங்கள் குளித்து வந்தவுடன் தருவார் . நாங்கள் அதை போட்டுகொண்டு பாட்டி தாத்தா அப்பா அம்மா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தவுடன் முதலில் கொடுப்பது தீபாவளி மருந்து . சாப்பிட்டே ஆகா வேண்டும்.



மருந்து சாப்பிட்ட பிறகுதான் ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ். ஆனால் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பொறுமை கூட இல்லாமல் மத்தாப்பு கொளுத்த புஸ்வாணம் சங்கு சக்கரம் என்று வைக்க ஓடி விடுவோம் . அப்பா ஒரு இரும்புபக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து அதில் கொளுத்தி அணைந்த மத்தாப்பை போட சொல்லுவார். வேற யார் காலிலும் மத்தாப்பு சுட்டுவிட கூடாது என்பதற்காக. அம்மாவும் எல்லா மாமிகளும் கங்கா ஸ்தானம் ஆச்சா என்று பரஸ்பரம் கேட்டு கொள்வார்கள் . என் அப்பாவும் மற்ற நண்பர்கள் அப்பாக்களும் ஹாப்பி தீவாளி கங்கா ஸ்தானம் ஆச்சா என்று கேட்டுக்கொண்டு நாங்கள் பட்டாசு வெடிப்பதை சூப்பர்விஸ் செய்வார்கள். இப்படியாக போகும் எங்கள் தீபாவளி. அன்று முழுவதும் புது ட்ரெஸ்ஸை அவிழ்க்க மாட்டோம். எல்லார் பட்டாசும் வெடித்த முடிந்த உடன் அதில் இருக்கும் மருந்தை எடுத்து கொளுத்தி போடுவோம்..... பட பட என்று வெடிக்கும்... அதை விட பெரிதாக இருக்கும் எங்கள் சிரிப்பு.

அந்த தீபாவளியை பார்த்தால் அனுப்பி வையுங்கள்.

Friday, May 15, 2020

வரம் கிடைக்குமா...!

வரம் கிடைக்குமா!

வர்ஷா ஞாயிற்று கிழமை என்பதால் லேட்டாக தான் எழுந்தாள். முரளி அவளுக்கு முன்னதாவே எழுந்து காபிக்கு பால் காய்ச்சி டிகாஷன் போட்டு வைத்து விட்டு  வாக்கிங் போயிருந்தான். காபியை குடித்து கொண்டே வாட்ஸாப்ப் ஓபன் பண்ணினாள்... அதில் வைஷுவுடன் (என் அக்கா) சாவித்ரி மீட் பண்ணின போட்டோவை பார்த்தாள்... 
பதில் போடுவதற்குள் அக்கா வைஷுவே கால் பண்ணினாள்.

ஹாய் குட்  மார்னிங்!  என்றாள்

எஸ் டியர்  குட்  மார்னிங்! என்னடி நீ சாவியை (சாவித்ரியை) மீட் பண்ணினதை சொல்லவே இல்லை. சூப்பர் பிக்ஸ்....

ஆமாம்டி திடீர் மீட் இங்க மயிலாப்பூர் வந்தா  பேங்க் விஷயமா அதனாலே  வரமுடியுமானு  கால் பண்ணினா சோ திடீர் மீட்டிங் என்றாள். 

நேரிய சம்பாஷணைக்கு பிறகு, வைஷு சொன்னாள் , அவங்க வீடுகூட விக்கலாம்னு  ஐடியா போலன்னு .... உடனே நான் அப்படியா முடிவு  பண்ணிடாளா  என்று கேட்டேன்... தெரியலை கேக்கறேன்னு சொல்லிட்டு போனினை வைத்தாள்.

முரளி உள்ளே நுழைத்தான்....மொபைலை கையில் வைத்தபடியே நான் : ஹாய் முரளி, வாக்கிங் ஆச்சா என்று கேட்டு விட்டு , முரளி இப்போ  வடபழனி காலனில  வீடு  எவ்வளவு  இருக்கும்? என்றேன்
வடபழனி காலனி வீடு 80 லட்சம் இருக்கும். கார் பார்க்கிங் கிடைக்காது ஆனா அங்க வீடு கெடைக்கறது ரொம்ப கஷ்டம் செம்ம ஏரியா என்றான்.
என் நினைவுகள் வடபழனி காலனிக்கு போனது.



நான் வசித்த அந்த காலனி வடபழனி கோவிலுக்கு மிக அருகில் இருந்தது.  கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும். பத்து தனி தனி வீடுகள் அடங்கிய காலனி  அது.

அன்று ஞாயிற்று கிழமை.

குழந்தைகள் நாங்கள் ஒருவரை ஒருவர் லைனில் தள்ளிக்கொண்டு பின்னால் சென்றுகொண்டு தப்பிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம்!!
ஒரே கூச்சல், அலறல் லைனில் எல்லோரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டுதான் செல்வார்கள், ஆனால் அன்று மட்டும் ஏன் அப்படி?
வேறொன்றுமில்லை.  ஞாயிற்றுக் கிழமையானால் வேப்பங்கோழுந்தை அரைத்து தொண்டையில் போட்டு முழுங்க சொல்லுவாள் பேபி மாமி.  செல்லம் மாமி குழந்தைகள் தப்பிக்காமல் இருக்க கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுவாள் !!

அதுக்குதான் ஒரே கூச்சல் அலறல்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் இதுவே அம்மாக்களின்  சட்டம.
 அப்பொழுது திங்கட்கிழமையானால் ஸ்கூல் யூனிபார்ம் வைட் அண்ட் வைட் ஆச்சே!!  எல்லாக் குழந்தைகளும் கிணற்றடியில் கூடி தங்கள் ஷூக்களை அலம்ப வேண்டும்.  யாருடைய ஷூ நன்றாக வெளுகிக்கிறது என்று போட்டி வேறு.
இப்படியே பகல் இரண்டு மணியான இட்லி தோசைக்கு மாவு அரைக்க அம்மாக்கள் கல்லுரல் அருகே கூடுவார்கள் ஏன்னென்றால் ஒரே கல்லுரல் 10 வீட்டுக்கும்..    ஒருவர் பின் ஒருவராக பேசிக்கொண்டே மாவு அரைப்பார்கள். 5 மணிக்குள் மாவு அரைத்து விட வேண்டும். ஏன்னென்றால் 5.30 மணிக்கு தூர்தர்ஷனில் சினிமா பார்க்க பக்கத்துக்கு தெருவில் இருக்கும் துர்கா வீட்டுக்கு போக வேண்டும். பெரும்பாலும் வரும்பொழுது தூங்கி கொண்டேதான் வருவோம் நாங்கள்.

திங்கள்கிழமை ஒரே பரபரப்பு... பக்கத்துக்கு வீட்டு  மாமா ஓட்டமும் நடையுமாக வந்து இன்னும் கடை திறக்கலை என்றார். எல்லா அம்மாக்களும் பெரிய குழந்தைகளை பார்த்து நேத்திக்கு சாயங்காலம் யூனிபோர்ம் அயன்  கடையிலேர்ந்து  வாங்கிண்டு  வர சொன்ன எங்கே கேக்கறேள்  என்றார்கள் கோரஸாக..... நாங்கள் எல்லாம் திரு திருனு முழிச்சுண்டே வாசலை பார்த்தால் அயன்கராரே வந்து நேத்திக்கு லேட் ஆயிடுச்சி அம்மா அதானு சொல்லறதுக்குள்ளே அனைவரும் அவரவர் யூனிபோர்மை எடுத்து போட்டுகொண்டு ரன்னிங் ரேஸ்ல ஸ்கூல் செல்வோம். இப்படியே சாயங்காலம் வீட்டு பாடம் (டியூஷன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு கத்துக்கொடுப்பார்கள் ) பிறகு விளையாட்டு என்று வாரம் முழுவதும் ஜோராக போகும்.

சனிக்கிழமை என்றால் கிருஷ்ணர் பஜன்ஸ்... பஜனை கேட்போமா இல்லையோ பிரசாதத்துக்காகவே உற்சாகமாக இருப்போம். புளியோரை, தயிர் சாதம், சுண்டல், பாயசம். அருமையாக இருக்கும் மொட்டை மாடியில் அனைவருக்கும் பரிமாறுவார்கள்.

சாதாரண தினங்களே  இப்படி என்றால், பண்டிகை நாட்கள் சொல்லவேண்டுமா? அதில் கொலு, தீபாவளி வெகு ஜோர். கொலுவுக்கு என்று சில பாடல்கள் கற்றுக்கொள்வோம். ஒரு வீட்டில் பாடியது ரிப்பீட் ஆக கூடாது. அதே சமயம் ஒரே நாளில் பாடவும் மாட்டோம். எல்லார் வீட்டு சுண்டலும் மொட்டை மாடியில் வைத்து சாப்பிடுவோம். ஆஹா என்ன அருமையான நாட்கள்...

இப்போது அந்த காலனியில் 8 வீடுகளில் புதிதாக வாங்கியவர்கள் வந்துவிட்டார்கள். விற்றவர்களில் என் அப்பாவும் ஒருவர்.  இப்போது உங்களுக்கு புரிகிறதா ஏன் என் மனம் இத்தனை பதைபதைக்கிறது  என்று? எப்படியாவது சாவித்ரி அம்மா வீட்டை  வித்தால் நானே  வாங்கி விட மாட்டோமா என்பதுதான் அது….

தினமும் அலுவலகம் செல்லும் பொது ஒரு முறையாவது காலனி  வழியாக காரை திருப்பாமல் வரமாட்டேன். இன்னும் அந்த காலனி மட்டும் நவீனத்துக்கு மாறாமல் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் கட்டிடம். இவ்வளவு குழந்தை பருவ நினைவுகளை  வரம் போல வாரி தந்த காலனியே எனக்கு கோவில். நான் கோவிலாக நினைக்கும் காலனியில் எனக்கு மறுபடியும் வாழ வரம் கிடைக்குமா?


- கல்யாணி கிருஷ்ணன்

Tuesday, May 12, 2020

தந்தையின் நினைவுகளுடன் என்னுடைய எழுத்தும் இடை இடையே...



புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த எம் மாவீரர்களின் குடும்பத்திற்காக........