Thursday, June 18, 2020

SOME OF MY FATHER'S BOOK

குழந்தைகளுக்கான மின்மினிக் கதைகள்!

முதற்படைப்பு : 1973
எழுதியவர் : கு. வரதராஜன்  
சென்னை - 1
வெளியிட்டவர் : வீர லட்சுமி பதிப்பகம்.

உரிமை

மண்டியிட்டு வாழ்வதை விட
மடிவதுமேல் - மாஜினி.


  



Wednesday, June 3, 2020

மனிதர்கள் பலவிதம்

யானைக்கும் அடி சறுக்கும்....... குடூரில்

அப்பாவின் அனுபவத்தில் இருந்து ...  1974

குடூர்  ஸ்டேஷனில் என் அப்பா சென்னை ரயிலுக்காக காத்து கொண்டு இருக்கிறார். இன்னொருவனும் பக்கத்தில் வந்து உட்காருகிறான்.....

இனி வருபவை நாம் நேரில் பார்ப்பது போல்....

வந்தவன் : " சென்னை ரயிலுக்கா? அப்பாவை பார்த்து

அப்பா : ஆமாம்... செய்தித்தாளில் முழுங்கினேன்.

வந்தவன் : சார், எனக்கு ஒரு பேப்பர் கொடுங்க

அப்பா கொடுக்கிறார்.

சிறிது  நேரத்தில் " சார் நான் கொஞ்சம்  பாத்ரூம் போயிட்டு வந்துடறேன். என்னோட பெட்டியை பாத்துக்கோங்க என்றான். சரி என்றேன்.

சிறிது நேரத்தில் வந்து விட்டான். ரொம்ப நன்றி என்று சொன்னான்.

நேரத்தை பார்த்தேன் இன்னும் ரெயில் வர அரை மணி நேரம் இருந்தது, ... அவரை பார்த்தேன்.

நானும் போயிட்டு  வரேன் கொஞ்சம் என்னோட பெட்டியை பார்த்துக்கோங்க என்றேன்... சரி சார் என்றான்.

நான் வந்து பார்க்கிறேன், ஆளையும் காணலை பெட்டியையும் காணலை. பக்கத்துல இருக்கறவங்ககிட்ட கிட்ட கேட்டா தெரியாதுன்னு சொல்லிட்டாங்க...

பெட்டியில் ஆபீஸ்  பணம் 200ரூ , கோப்புகள் மற்றும் என் துணிமணிகள் இருந்தது. நல்ல வேலையாக என் பர்சில் 200 ரூபாய் இருந்தது. ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

யாரையும் லேசில் நம்பாத என்னையே ஏமாற்றி விட்டானே என்று நினைத்து கொண்டேன். இதுதான் யானைக்கும் அடி சறுக்கும் என்பதோ?

அதே ரயில்வே ஸ்டேஷன். 1982

நான் ரயிலுக்காக waiting ....

ஒருவர் என்னை பார்த்து... சார் ஒரு request நான் பெங்களூரு போகணும். வழில பர்ஸ் பிக் பாக்கெட் ஆயிடுச்சு... நீங்க எனக்கு ஒரு 300 ரூபாய் கொடுத்தீங்கனா ஊர் போய் சேர்ந்துடுவேன். உங்களோட அட்ரஸ் சொல்லுங்க மணிஆர்டர் பண்ணிடறேன் என்றார். அவர் தமிழ் தெரியாதனால் இங்கிலீஷில் தடுமாறி பேசினார்.

சிறிது நேரம் யோசித்தேன்... என்னிடம் 1000 ரூபாய் இருந்தது. சரி சார் உங்களுக்கு தரேன். உங்ககிட்டேர்ந்து எனக்கு பணம் திரும்ப வருமான்னு தெரியாது, நானும் எதிர் பார்க்கலை , ஏதோ உங்களுக்கு help பண்ணனும்னு தோணறது பண்ணறேன் என்று சொல்லி 300 ரூபாயை கொடுத்தேன். அவருக்கு முகத்தில்  அவ்ளோ சந்தோசம். வலுக்கட்டாயமாக தன்  அட்ரஸ், பெயர் எழுதி தந்தார் என்னோட அட்ரஸ்  எழுதிக்கொண்டு உங்களுக்கு கண்டிப்பா நான் பணம் அனுப்பிடறேனு சொன்னார்.

இதை வீட்டில் வந்து சொன்ன உடன் என் அம்மா குடூர்ல விட்டது ஞாபகம் இல்லையா? இந்த 300 ரூபாயும் போச்சு என்றார்.

அதை பற்றி மறந்தே போனோம்.

எண்ணி 15 நாட்களில் மணி  ஆர்டர்... போஸ்ட்மேன் கத்தினான் யாரு என்று பார்த்தால் சிக்மகளூரில் இருந்து நரசிம்ம பட்.... 300 ரூபாய் மணி ஆர்டர். அதில் அவர் " மனித நேயம் இன்னும் அழியவில்லை " நீங்கள் மட்டும் அன்று எனக்கு உதவ வில்லை என்றால் " I would have suffered " Thanks a Million " we will continue our friendship " என்று சொன்னது மட்டும் இல்லாது  He used to send greetings for all festivals.

இதை ரயில் சிநேகம் என்றும் சொல்லலாமா?