Thursday, September 9, 2021

My story in Hyderabad only Tamil Magazine "Nirai" மாலுக்கு போகலாம்பா!

உமா இந்த ஏரியாக்கு வந்து ஒரு வாரங்களே ஆகிறது. அவள் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. இந்த கொரோனா முதல் அலையின் முடிவில், பள்ளிக்கு பக்கம் வீடு இருக்கட்டுமே என்று அவசர அவசரமாக இந்த வீட்டுக்கு வந்தாள். வந்த நேரம் இரண்டாம் அலை வந்து மறுபடியும், பள்ளி ஆன்லைன் யில் என்று ஆகிவிட்டது. வீடு இப்போதுதான் ஓரு வழியாக செட் ஆகியது. காலை வேலையை வழக்கம் போல் செய்து கொண்டிருதவளுக்கு ஒரு குழந்தையின் அழுகுரல், அது எதற்காக அழுவது என்று கவனிக்க வைத்தது. மாலுக்கு எப்போப்பா போலாம் என்று அழுது அடம்பிடித்து கொண்டு இருந்தது. ஹோ... மாளுக்காகவா! அது சரி இப்போது குழந்தைகளுக்கு வீடே ஜெயில் ஆகிவிட்டது. அதுவும் கீழே விளையாட அனுப்பக்கூட பயமாக இருக்கிறது. இப்பொழுது உள்ள காலகட்டத்தில், பெரியவர்களுக்கே வாரக்கடைசியானால் மாலில் தான் முடியும். இந்த கொரோனா வந்து எல்லாருக்குமே ஒரு பொழுதுபோக்குமே இல்லாமல் போய் விட்டது. இப்படி எண்ணிய நிலையில் என் வேலை முடிந்து ஆன்லைன் கிளாஸ் நான் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விட்டேன். ஆனாலும் அவ்வப்போது அந்த குழந்தையின் குரல் மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. ஆன்லைன் கிளாஸ்சும் முடிந்து மதிய உணவு சாப்பிடலாம் என்று தட்டை வைத்தால் , இப்போது குழந்தை மிக அழுதது, நம் பக்கத்துக்கு வீடுதானே நாமே போய் கேட்டு சமாதானம் செய்யலாமா என்று யோசித்தாள். அனால், பக்கத்துக்கு வீட்டு அம்மாவை ஒரு இரு முறை பார்த்து புன்னகை செய்ததோடு சரி, பெரிய பரிச்சயம் இல்லை. எப்படி போய் கேட்பது என்று ஒரு யோசனையில் இருந்தாள். அப்போது பக்கத்துக்கு வீட்டு அம்மாவே வந்தார். மேடம்! குழாயில் தண்ணி வருகிறதா? எங்க வீட்ல கிச்சேன்ல வரல அதனாலதான் என்றாள். வாங்க! உள்ளே வாங்க நான் பார்த்துட்டு சொல்றேன் என்று கிச்சன் செக் செய்து பார்த்து, எல்லா மேடம் வரலை என்று சொன்னேன். ஓ சரி! வாச்மேனிக்கு சொல்றேன் என்று சொன்னவளை நான் ரொம்ப நேரமாக நினைத்து கொண்டு இருந்த கேள்வியை கேட்டே விட்டேன். மேடம்! ஏன் உங்க பொண்ணு மாலுக்கு போகணும்னு அழுதுண்டே இருக்கா, பாவம், இப்போ பசங்களுக்கு வீட்ல இருந்து இருந்து ஒரு சலிப்பு வந்திடுச்சு. நான் வேணும்னா வந்து சமாதான படுத்தி பாக்கறேனே என்றாள். அதற்கு பக்கத்துக்கு வீட்டு அம்மா, மேடம்னு எல்லாம் கூப்பாடாதீங்க என்னோட பேரு ஷாந்தி, நீங்க ஷாந்தி னே கூப்பிடலாம். அப்பறம் என்னோட பொண்ணு மாலுக்கு எப்போப்பா போலாம்னு அழறதுக்கு காரணம் அவ ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண முடியாதனலதான் என்று சொன்னவளை உமா கேள்வி குறியுடன் பார்த்தாள். என்னங்க குழப்பமா இருக்கா? என் கணவர் லேட்டஸ்ட் அசிஸ்சொரிஸ் (வளையல், கம்மல், செயின்) எல்லாம் வியாபாரம் பண்ணற வியாபாரி. மாலுளதான் எங்களோட சின்ன கடை இருக்கு. சனி ஞாயறுனா என் பொண்ணும் மாலுக்கு வந்துடுவா. இப்போ கொரோனால எல்லா மாலும் மூடி எங்களுக்கு வருமானமே இல்லை. கொஞ்சம் தெரிஞ்ச வாடிக்கையாளர்கள் வாங்கறதுனால வறுமை இல்லாமே இருக்கோம் ஆனா ஸ்கூல் பீஸ் கட்ட முடியலை அதனால என்பொண்ணு ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண கூடாதுனு சொல்லிட்டாங்க. சரி எப்படியாவது, கட்டிடலாம்னு இருக்கும் போது, இப்போ கட்டலைனா எக்ஸாம் இந்த வருஷம் எழுத முடியாதுனு சொல்லிட்டாங்க, 10 நாள் டைம் கொடுத்திருக்காங்க அதான் காலையிலேர்ந்து அழுதுகிட்டே இருக்கா என்று சொன்ன சாந்தியை என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்து திகைத்து நின்றாள். இதை போல் எத்தனை எத்தனை சாந்திகளின் குடும்பம் கஷ்ட படுகிறதோ என்று நினைக்கையில் மனம் வலிக்கிறது...... எப்போது இது முற்று புள்ளிக்கு வரும்.... கண்டிப்பாக விடிவு வரும் என்ற நம்புவோம்.

Thursday, August 20, 2020

விடியலும் வந்ததே

“Meet me tomorrow at 4pm” என்று அரவிந்தின் பள்ளி ஆசிரியரிடமிருந்து Whatsapp செய்தி வந்ததிலிருந்து சுவாதிக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது.அரவிந்திடம் உடனே கேட்கலாம் என்றால் அவன் Chemistry tuition க்கு போயிருந்தான். அவன் வந்தவுடன், மெதுவாக அவனிடம் கேட்டாள் " என்னம்மா ஸ்கூலில் விஷயம் என்று கேட்டாள்" அவனும் "ஒண்ணும் இல்லம்மா, எல்லாம் நல்லாதான் போறது" என்று சொல்லிவிட்டான். 




ஆங்... உங்களிடம் சொல்லவில்லையே. அவன் இப்போது +1 படித்துக் கொண்டிருக்கிறான். நல்லபையன்தான். எதுக்கு இந்தசெய்தி என்று சுவாதியின் சிந்தனை அதிலேயே இருந்தது. வெங்கட் ஆபிசிலிருந்து வந்ததும் சுவாதி விஷயத்தை சொன்னாள். வெங்கட்டும் நாளைக்குப் போய்ப் பார்க்கலாம் என்றுகூலாக சொல்லிவிட்டான். 

மறுநாள் அரவிந்தின் பள்ளி…… சுவாதியும் கல்லூரியிலிருந்து நேராக பள்ளிக்கு மூணரை மணிக்கே வந்துவிட்டாள். 
அவள் ஒரு கல்லூரியில் பகுதி நேரஆசிரியை. வெங்கட்டும் நேராக சரியாக நான்கு மணிக்கு வந்துவிட்டான். 

வகுப்பறை அருகில் சென்றவுடன்தான், அங்குஇன்னும் பாத்து பனிரெண்டு பெற்றோர்களும் வந்திருக்கிறார்கள் என்று. எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை. 

ஆசிரியை உள்ளே அழைத்தார். சுவாதியும் வெங்கட்டும் உள்ளே சென்றமர்ந்தனர். ஆசிரியை புன்சிரிப்புடன் "ஒங்க பைய்யன் நல்லா படிக்கிறான். அதனால அவன State rank வாங்கற அளவுக்கு Train பண்ணப் போறோம்" அதைக் கேட்ட சுவாதிக்கு அப்பாடா என இருந்தது. "மேலும் தொடர்ந்தார் ஆசிரியை "அதற்கு உங்கள் ஒத்தொழைப்பும் வேண்டும் என ஆரம்பித்தார்" உடனே இருவரும் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டனர். அதற்கு ஆசிரியை "நாங்கள் இந்த வருஷம் முழுசும் +2 பாடமே எடுத்து முடித்து விடுவோம். அடுத்த வருஷம் மீண்டும் மீண்டும்அதே பாடத்தை நன்றாகப் பயிற்சி கொடுப்போம். அதனால் நீங்க வீட்டுலகூட +2 பாடம் மட்டுமே concentrate பண்ணுங்க" என்றார். அவர்கள் இருவரும் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தனர். "

அரவிந், நீ நீட் எக்ஸாமில் ஸ்டேட் ரேங்க் வாங்கிருக்கே" என்று வெங்கட் சந்தோஷத்தில் குதித்தார். அம்மாவின் கண்களில்ஆனந்தக் கண்ணீர். அப்பொழுது அரவிந்தின் சிந்தனை பின்னோக்கிப் போனது. "அன்று பள்ளியிலிருந்து நானும் என் பெற்றோரும் சேர்ந்தே வந்தோம். அப்பா என்னிடம் விஷயத்தை சொன்னார். அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்டார். நானும், அப்பாவிடம் +1 பாடம் படிக்காமல் +2 சிலபஸ் புரியாதுஎன்றேன். அடிப்படை +1ல் தான் இருக்கு என்று சொன்னேன். அதற்க்கு அம்மாவும் +1 அடிப்படை சொல்லிதர்றேன் ஆனாலும்ரெண்டும் மேனேஜ் பண்ணறது கஷ்டம் என்றாள். 
"நானும் அதை என்னிடம் விட்டு விடு என்று சொன்னது மட்டும் இல்லாமல், வீட்டிற்கு வந்து முதல் வேலையாக என்முகநூலில், இரண்டு வருடம் கழித்துப் பார்ப்போம் என்று ஸ்டேட்டஸ் போட்டேன். "அன்று முதல் நான் வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுடன் +1 பயிற்சி. பிறகு டியூஷனில் +2 பாடம் என தீவிரமாக உழைத்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், அடிப்படை +1 இருந்ததால் +2 படிப்பு ஈசியாக இருந்தது. இப்படித்தான் இரண்டு வருடங்கள்உருண்டோடியது"  

“அரவிந்த்” என்று சுவாதி கூப்பிட்டாள். சுவீட்டுடன் வந்து நின்றாள். அரவிந்த் சிந்தனை களைந்தான். "அன்று மட்டும் அவர்கள் பள்ளியின் பேச்சைக் கேட்டு என்னை ப்ரெஷர் பண்ணி இருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா? இன்றோ நான் மட்டும் தான் நீட்டில் தேர்வாகியிருக்கிறேன்" என்று அவன் நினைக்கும் பொது அவன் கண்களில் வந்த கண்ணீர்பல உண்மைகளை உணர்த்தியது சுவாதிக்கு வெங்கட்டுக்கும்.

Monday, August 17, 2020

கிருஷ்ண ஜெயந்தி கலாட்டா

எல்லாரும் கிருஷ்ணா ஜெயந்தி இந்த ஆண்டு 2020 நன்றாக கொண்டாடினீர்களா? 

ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு பல நினைவுகளை ஞாபகப்படுத்தும். 
அதில் எனக்கு கிருஷ்ணா ஜெயந்தியும் ஒன்று. 


காலையிலேயே அம்மாமார்கள் எழுந்து, சமையலை முடித்து விடுவார்கள். ஏன்னென்றால் கிருஷ்ணருக்கு பட்சணம் செய்ய வேண்டுமே ! திரட்டி பால், லட்டு, முறுக்கு, தேன்குழல், தட்டை , வெல்ல சீடை, உப்பு சீடை. பிறகு மற்ற பலகாரங்கள் . இதில் எல்லா அம்மாக்களுக்கும் சவாலாக இருப்பது சீடை, அதிலும் உப்பு சீடை. இதற்காக ஒரு அவசர கூட்டம் நடக்கும். சீடை பண்ணும்போது மட்டும் கொஞ்சம் நான் கூப்படறேன் வந்துட்டு போங்கோ... மதியம் 2 மணி அளவில் காலணி அம்மக்கள் இடையே நெறைய நடமாட்டங்கள் இருக்கும்... அவங்க எங்க வீட்டுக்கு வரதும், எங்க அம்மா அவங்க வீட்டுக்கு போறதுமாக.... சீடை பண்ணும் நேரம் அது.  
குழந்தைகள் நாங்க எல்லாம் 3 மணியளவில் எங்கள் டிரஸ், சிகை அலங்காரம் எல்லாம் ரெடியாக எடுத்து வைத்து கொள்வோம். கிருஷ்ணர், ராதை, என்று வேடம் அணிந்து கொள்ள. 4 மணியிலேர்ந்து வாசலில் இழை கோலம் போட ஆரம்பித்து விடுவார்கள் அக்காக்கள்... கிருஷ்ணர் கால் போடும் போது அது காய்கிறவரை யாரும் நடக்க கூடாது என்று நிபந்தனை. அடுத்து நாங்கள் எல்லாரும் அலங்காரம் பண்ணி ரெடியாவோம் பூஜைக்கு. 

காலனியில் ஒரு வீட்டில் இருக்கும் கிருஷ்ணர் விக்கிரகம் துளசி யின் கீழ் வைத்து பொதுவாக, பூஜை ஆரம்பமாகும். அங்கேயே பிரசம் நெய்வேத்தியம் என்று சொன்னால் எல்லார் வீட்டில் இருந்தும் பட்சங்கள் எடுத்து வந்து பல ஆகரங்களாக அவருக்கு நெய்வேத்தியம் நடக்கும். 

பஜனை, கிருஷ்ணர் பாடல்கள் என்று வெகு ரம்யமாக போகும்.... ஆடல் பாடல் நாங்கள் செய்வோம். அதில் கட்டாயமாக இடம் பெரும் பாடல்கள் சில.... மாடு மேய்க்கும் கண்ணா,  அலை பாயுதே கண்ணா,  புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,  கண்ணா நீ பேகமாய் வாராய் இறுதியாக இடம் பெரும் பாடல் " குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ".... எங்களோட ஆடல் முடிந்தவுடன் எங்கள் கண்கள் எல்லாம் எல்லார் வீட்டு ப்ரசாதங்களிலேயே இருக்கும். அதற்காகவே, எங்களையும் பஜனை பாடல்களை கத்தி பாட சொல்லுவார் விச்சு அப்பா. அவர்தான் அங்கே ஆஸ்தான வாத்தியார். எல்லார் கையிலும் ஸ்வீட்ஸ் கொடுத்து " க்ருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லி வாயில் போட்டுக்க சொல்லுவார். அப்ப்பா ஒரு வழியாக பூஜை முடித்தது என்று நாங்கள் எல்லாரும் அப்படியே அமர்ந்து கொள்வோம். 

இலையில் அழகாக பாயசம், அப்பம், வடை, சுண்டல் , புளியோதரை, வெண்ணை போட்ட தயிர் சாதம், என்று பரிமாற நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே சாப்பிட்டு, சில குழந்தைகள் அலங்காரம் கலைக்காமலே  உறங்கி விடுவோம். இந்த உப்பு சீடை சம்பாஷணை ஒரு வாரம் எங்கள் அம்மக்கள் இடையே தொடரும். 

இப்படியாக போகும் நான் பார்த்த சிறு வயது கிருஷ்ணா ஜெயந்தி. 
இன்றும் நான் அதை அசைபோட்டவண்ணம் ஓவ்வொரு ஸ்னாக்ஸ் அண்ட் சுவீட்ஸ் செய்தேன். இதே மாதிரி பண்டிகைகள் செய்வது நம் பாரம்பரியம் என்றாலும் அது ஒரு சந்தோஷத்தை, உற்சாகத்தை நம்முள் உண்டாக்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. 

 A Break from our routine.

Thursday, June 18, 2020

SOME OF MY FATHER'S BOOK

குழந்தைகளுக்கான மின்மினிக் கதைகள்!

முதற்படைப்பு : 1973
எழுதியவர் : கு. வரதராஜன்  
சென்னை - 1
வெளியிட்டவர் : வீர லட்சுமி பதிப்பகம்.

உரிமை

மண்டியிட்டு வாழ்வதை விட
மடிவதுமேல் - மாஜினி.