Thursday, August 20, 2020

விடியலும் வந்ததே

“Meet me tomorrow at 4pm” என்று அரவிந்தின் பள்ளி ஆசிரியரிடமிருந்து Whatsapp செய்தி வந்ததிலிருந்து சுவாதிக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது.அரவிந்திடம் உடனே கேட்கலாம் என்றால் அவன் Chemistry tuition க்கு போயிருந்தான். அவன் வந்தவுடன், மெதுவாக அவனிடம் கேட்டாள் " என்னம்மா ஸ்கூலில் விஷயம் என்று கேட்டாள்" அவனும் "ஒண்ணும் இல்லம்மா, எல்லாம் நல்லாதான் போறது" என்று சொல்லிவிட்டான். 




ஆங்... உங்களிடம் சொல்லவில்லையே. அவன் இப்போது +1 படித்துக் கொண்டிருக்கிறான். நல்லபையன்தான். எதுக்கு இந்தசெய்தி என்று சுவாதியின் சிந்தனை அதிலேயே இருந்தது. வெங்கட் ஆபிசிலிருந்து வந்ததும் சுவாதி விஷயத்தை சொன்னாள். வெங்கட்டும் நாளைக்குப் போய்ப் பார்க்கலாம் என்றுகூலாக சொல்லிவிட்டான். 

மறுநாள் அரவிந்தின் பள்ளி…… சுவாதியும் கல்லூரியிலிருந்து நேராக பள்ளிக்கு மூணரை மணிக்கே வந்துவிட்டாள். 
அவள் ஒரு கல்லூரியில் பகுதி நேரஆசிரியை. வெங்கட்டும் நேராக சரியாக நான்கு மணிக்கு வந்துவிட்டான். 

வகுப்பறை அருகில் சென்றவுடன்தான், அங்குஇன்னும் பாத்து பனிரெண்டு பெற்றோர்களும் வந்திருக்கிறார்கள் என்று. எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை. 

ஆசிரியை உள்ளே அழைத்தார். சுவாதியும் வெங்கட்டும் உள்ளே சென்றமர்ந்தனர். ஆசிரியை புன்சிரிப்புடன் "ஒங்க பைய்யன் நல்லா படிக்கிறான். அதனால அவன State rank வாங்கற அளவுக்கு Train பண்ணப் போறோம்" அதைக் கேட்ட சுவாதிக்கு அப்பாடா என இருந்தது. "மேலும் தொடர்ந்தார் ஆசிரியை "அதற்கு உங்கள் ஒத்தொழைப்பும் வேண்டும் என ஆரம்பித்தார்" உடனே இருவரும் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டனர். அதற்கு ஆசிரியை "நாங்கள் இந்த வருஷம் முழுசும் +2 பாடமே எடுத்து முடித்து விடுவோம். அடுத்த வருஷம் மீண்டும் மீண்டும்அதே பாடத்தை நன்றாகப் பயிற்சி கொடுப்போம். அதனால் நீங்க வீட்டுலகூட +2 பாடம் மட்டுமே concentrate பண்ணுங்க" என்றார். அவர்கள் இருவரும் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தனர். "

அரவிந், நீ நீட் எக்ஸாமில் ஸ்டேட் ரேங்க் வாங்கிருக்கே" என்று வெங்கட் சந்தோஷத்தில் குதித்தார். அம்மாவின் கண்களில்ஆனந்தக் கண்ணீர். அப்பொழுது அரவிந்தின் சிந்தனை பின்னோக்கிப் போனது. "அன்று பள்ளியிலிருந்து நானும் என் பெற்றோரும் சேர்ந்தே வந்தோம். அப்பா என்னிடம் விஷயத்தை சொன்னார். அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்டார். நானும், அப்பாவிடம் +1 பாடம் படிக்காமல் +2 சிலபஸ் புரியாதுஎன்றேன். அடிப்படை +1ல் தான் இருக்கு என்று சொன்னேன். அதற்க்கு அம்மாவும் +1 அடிப்படை சொல்லிதர்றேன் ஆனாலும்ரெண்டும் மேனேஜ் பண்ணறது கஷ்டம் என்றாள். 
"நானும் அதை என்னிடம் விட்டு விடு என்று சொன்னது மட்டும் இல்லாமல், வீட்டிற்கு வந்து முதல் வேலையாக என்முகநூலில், இரண்டு வருடம் கழித்துப் பார்ப்போம் என்று ஸ்டேட்டஸ் போட்டேன். "அன்று முதல் நான் வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுடன் +1 பயிற்சி. பிறகு டியூஷனில் +2 பாடம் என தீவிரமாக உழைத்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், அடிப்படை +1 இருந்ததால் +2 படிப்பு ஈசியாக இருந்தது. இப்படித்தான் இரண்டு வருடங்கள்உருண்டோடியது"  

“அரவிந்த்” என்று சுவாதி கூப்பிட்டாள். சுவீட்டுடன் வந்து நின்றாள். அரவிந்த் சிந்தனை களைந்தான். "அன்று மட்டும் அவர்கள் பள்ளியின் பேச்சைக் கேட்டு என்னை ப்ரெஷர் பண்ணி இருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா? இன்றோ நான் மட்டும் தான் நீட்டில் தேர்வாகியிருக்கிறேன்" என்று அவன் நினைக்கும் பொது அவன் கண்களில் வந்த கண்ணீர்பல உண்மைகளை உணர்த்தியது சுவாதிக்கு வெங்கட்டுக்கும்.

No comments:

Post a Comment