வரம் கிடைக்குமா!
வர்ஷா
ஞாயிற்று கிழமை என்பதால் லேட்டாக தான் எழுந்தாள். முரளி அவளுக்கு முன்னதாவே எழுந்து காபிக்கு
பால் காய்ச்சி டிகாஷன் போட்டு வைத்து விட்டு
வாக்கிங் போயிருந்தான். காபியை குடித்து கொண்டே வாட்ஸாப்ப் ஓபன் பண்ணினாள்...
அதில் வைஷுவுடன் (என் அக்கா) சாவித்ரி மீட் பண்ணின போட்டோவை பார்த்தாள்...
பதில் போடுவதற்குள் அக்கா வைஷுவே கால் பண்ணினாள்.
பதில் போடுவதற்குள் அக்கா வைஷுவே கால் பண்ணினாள்.
ஹாய்
குட் மார்னிங்! என்றாள்
எஸ்
டியர் குட் மார்னிங்! என்னடி நீ சாவியை (சாவித்ரியை) மீட் பண்ணினதை
சொல்லவே இல்லை. சூப்பர் பிக்ஸ்....
ஆமாம்டி திடீர் மீட் இங்க மயிலாப்பூர் வந்தா பேங்க்
விஷயமா அதனாலே வரமுடியுமானு கால் பண்ணினா சோ திடீர் மீட்டிங் என்றாள்.
நேரிய சம்பாஷணைக்கு பிறகு, வைஷு சொன்னாள் , அவங்க வீடுகூட விக்கலாம்னு ஐடியா போலன்னு .... உடனே நான் அப்படியா முடிவு பண்ணிடாளா என்று கேட்டேன்... தெரியலை கேக்கறேன்னு சொல்லிட்டு போனினை வைத்தாள்.
நேரிய சம்பாஷணைக்கு பிறகு, வைஷு சொன்னாள் , அவங்க வீடுகூட விக்கலாம்னு ஐடியா போலன்னு .... உடனே நான் அப்படியா முடிவு பண்ணிடாளா என்று கேட்டேன்... தெரியலை கேக்கறேன்னு சொல்லிட்டு போனினை வைத்தாள்.
முரளி
உள்ளே நுழைத்தான்....மொபைலை கையில் வைத்தபடியே நான் : ஹாய் முரளி, வாக்கிங் ஆச்சா என்று
கேட்டு விட்டு , முரளி இப்போ வடபழனி காலனில வீடு எவ்வளவு இருக்கும்? என்றேன்
வடபழனி
காலனி வீடு 80 லட்சம் இருக்கும். கார் பார்க்கிங் கிடைக்காது ஆனா அங்க வீடு கெடைக்கறது
ரொம்ப கஷ்டம் செம்ம ஏரியா என்றான்.
என்
நினைவுகள் வடபழனி காலனிக்கு போனது.
நான்
வசித்த அந்த காலனி வடபழனி கோவிலுக்கு மிக அருகில் இருந்தது. கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும். பத்து தனி தனி வீடுகள்
அடங்கிய காலனி அது.
அன்று
ஞாயிற்று கிழமை.
குழந்தைகள் நாங்கள் ஒருவரை ஒருவர் லைனில் தள்ளிக்கொண்டு
பின்னால் சென்றுகொண்டு தப்பிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம்!!
ஒரே
கூச்சல், அலறல் லைனில்
எல்லோரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டுதான் செல்வார்கள், ஆனால் அன்று மட்டும் ஏன்
அப்படி?
வேறொன்றுமில்லை. ஞாயிற்றுக் கிழமையானால் வேப்பங்கோழுந்தை அரைத்து
தொண்டையில் போட்டு முழுங்க சொல்லுவாள் பேபி மாமி.
செல்லம் மாமி குழந்தைகள் தப்பிக்காமல் இருக்க கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுவாள்
!!
அதுக்குதான்
ஒரே கூச்சல் அலறல்
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமை காலையும் இதுவே அம்மாக்களின்
சட்டம.
அப்பொழுது திங்கட்கிழமையானால் ஸ்கூல் யூனிபார்ம்
வைட் அண்ட் வைட் ஆச்சே!! எல்லாக் குழந்தைகளும்
கிணற்றடியில் கூடி தங்கள் ஷூக்களை அலம்ப வேண்டும். யாருடைய ஷூ நன்றாக வெளுகிக்கிறது என்று போட்டி வேறு.
இப்படியே
பகல் இரண்டு மணியான இட்லி தோசைக்கு மாவு அரைக்க அம்மாக்கள் கல்லுரல் அருகே கூடுவார்கள்
ஏன்னென்றால் ஒரே கல்லுரல் 10 வீட்டுக்கும்..
ஒருவர் பின் ஒருவராக பேசிக்கொண்டே மாவு அரைப்பார்கள். 5 மணிக்குள் மாவு அரைத்து
விட வேண்டும். ஏன்னென்றால் 5.30 மணிக்கு தூர்தர்ஷனில் சினிமா பார்க்க பக்கத்துக்கு
தெருவில் இருக்கும் துர்கா வீட்டுக்கு போக வேண்டும். பெரும்பாலும் வரும்பொழுது தூங்கி
கொண்டேதான் வருவோம் நாங்கள்.
திங்கள்கிழமை
ஒரே பரபரப்பு... பக்கத்துக்கு வீட்டு மாமா
ஓட்டமும் நடையுமாக வந்து இன்னும் கடை திறக்கலை என்றார். எல்லா அம்மாக்களும் பெரிய குழந்தைகளை
பார்த்து நேத்திக்கு சாயங்காலம் யூனிபோர்ம் அயன்
கடையிலேர்ந்து வாங்கிண்டு வர சொன்ன எங்கே கேக்கறேள் என்றார்கள் கோரஸாக..... நாங்கள் எல்லாம் திரு திருனு
முழிச்சுண்டே வாசலை பார்த்தால் அயன்கராரே வந்து நேத்திக்கு லேட் ஆயிடுச்சி அம்மா அதானு
சொல்லறதுக்குள்ளே அனைவரும் அவரவர் யூனிபோர்மை எடுத்து போட்டுகொண்டு ரன்னிங் ரேஸ்ல ஸ்கூல்
செல்வோம். இப்படியே சாயங்காலம் வீட்டு பாடம் (டியூஷன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல்
பெரியவர்கள் பிள்ளைகளுக்கு கத்துக்கொடுப்பார்கள் ) பிறகு விளையாட்டு என்று வாரம் முழுவதும்
ஜோராக போகும்.
சனிக்கிழமை
என்றால் கிருஷ்ணர் பஜன்ஸ்... பஜனை கேட்போமா இல்லையோ பிரசாதத்துக்காகவே உற்சாகமாக இருப்போம்.
புளியோதரை, தயிர் சாதம், சுண்டல், பாயசம். அருமையாக இருக்கும் மொட்டை மாடியில் அனைவருக்கும்
பரிமாறுவார்கள்.
சாதாரண
தினங்களே இப்படி என்றால், பண்டிகை நாட்கள்
சொல்லவேண்டுமா? அதில் கொலு, தீபாவளி வெகு ஜோர். கொலுவுக்கு என்று சில பாடல்கள் கற்றுக்கொள்வோம்.
ஒரு வீட்டில் பாடியது ரிப்பீட் ஆக கூடாது. அதே
சமயம் ஒரே நாளில் பாடவும் மாட்டோம். எல்லார் வீட்டு சுண்டலும் மொட்டை மாடியில் வைத்து
சாப்பிடுவோம். ஆஹா என்ன அருமையான நாட்கள்...
இப்போது
அந்த காலனியில் 8 வீடுகளில் புதிதாக வாங்கியவர்கள் வந்துவிட்டார்கள். விற்றவர்களில்
என் அப்பாவும் ஒருவர். இப்போது உங்களுக்கு
புரிகிறதா ஏன் என் மனம் இத்தனை பதைபதைக்கிறது
என்று? எப்படியாவது சாவித்ரி அம்மா வீட்டை
வித்தால் நானே வாங்கி விட மாட்டோமா
என்பதுதான் அது….
தினமும்
அலுவலகம் செல்லும் பொது ஒரு முறையாவது காலனி
வழியாக காரை திருப்பாமல் வரமாட்டேன். இன்னும் அந்த காலனி மட்டும் நவீனத்துக்கு
மாறாமல் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் கட்டிடம். இவ்வளவு குழந்தை பருவ நினைவுகளை வரம் போல வாரி தந்த காலனியே எனக்கு கோவில். நான்
கோவிலாக நினைக்கும் காலனியில் எனக்கு மறுபடியும் வாழ வரம் கிடைக்குமா?
- கல்யாணி கிருஷ்ணன்
எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தை பருவ நினைவுகளை எவ்வளவு அழகாக...Lovely...Keep write...
ReplyDeleteவடபழனி.. சென்னையில் எனக்கும் மறக்க முடியாத இனிமையான நினைவுகளை கொண்ட ஏரியா..
S... very close to my heart. Thank you.
ReplyDeleteஅருமை
ReplyDeleteThanks a ton
Deleteவீடு என்பது கட்டிடம் மட்டும் அல்ல..அது அங்கே வாழ்ந்தவர்களின் உணர்வு..அருமையான எழுத்து..வாழ்த்துக்கள்
ReplyDelete