Thursday, April 30, 2020

A Second life....

சம்பவம் 2 :-

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட கண்டம். இனி அந்த காட்சி நீங்கள் சொன்னபடி ...

கர்நாடகா குல்பர்க்கா சுலியா வழியாக பஸ் சென்று கொண்டு இருக்கிறது. நான் பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறேன். பின்சீட்டில் உட்காரவே மாட்டேன், ஒரு முஸ்லிம் தம்பதியர் என்னிடம் வந்து, நாங்கள் இருவரும் சேர்த்து உட்கார வேண்டும், பின்சீட்டில் ஒரு இடம் இருக்கிறது, நீங்கள் அங்கு போய்  அமர முடியுமா என்று கேட்டார்கள். அதனால்தான் பின்சீட்டு.....

பஸ்சின் பின்சீட்டில் உட்கார்ந்த சில நேரத்தில் கண் உறங்கி போனேன். கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய சத்தம்.... அதுதான் தெரியும். கண்விழித்து பார்த்தால், ஒரு நதிக்கரையில் நான், ஒரே அழுகுரல், ஆம்புலன்ஸ் சத்தம்.... பஸ் கீழே விழுந்து கிடந்தது..... என் கை  கால்களை தொட்டு பார்த்தேன், எல்லாம் இருந்தது சிறு காயங்களுடன்.... சரி வாயை கொப்பளிக்கலாம் என்று தண்ணியை  எடுத்து கொப்பளித்து நதியை பார்த்தால் ஒரே ரத்தம், என் வாயிலேர்ந்துதான்... அதை பார்த்த மாத்திரத்தில், மயங்கி போனேன்.

கண் விழித்தபோது, சுலேயா அரசு மருத்துவமனையில் படுத்திருதேன். நான் கண்விழித்ததை பார்த்த நர்ஸ், உங்களுக்கு முன்பற்கள் மொத்தமா போய்விட்டது, தையல் போட்டு இருக்கிறோம் என்றார். வாய் வீங்கி இருந்தது. சாப்பிட கூட வாய் திறக்க முடிய வில்லை. சுலேயாவில் இருக்கும் என் நண்பரும், வியாபாரி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து கொண்டு போனார். நான் அவர் வீட்டில் 2 1/2 மாதம் இருந்து சித்தா வைத்தியம் பெற்றேன். இப்போது நலமாக இருக்கிறேன். இன்னும் 10 நாட்களில் சென்னை வருகிறேன் என்று இத்தனை விபரங்களை தாங்கி வந்த இன்லேண்ட் லெட்டர் எங்களுக்கு கிடைத்தது.

இப்போதும்  அந்த நிகழ்ச்சியை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. அதில் ஒன்று கடவுளின் கருணை , சுமார் 20 பேர் இருந்த பஸ்சில்  நீங்கள் பிழைத்தது.( உன்னிடம் இடம் கேட்டு உட்கார்ந்த முஸ்லிம் தம்பதியர், விபத்து நடத்த இடத்திலேயே உயிர் இழந்ததாக நீங்கள் சொன்னீர்கள்) மற்றொன்று உங்களின் மனவலிமை. நீங்கள் பூரண குணமாகும் வரை எங்களுக்கு விஷியத்தை சொல்லாமல் குடும்பத்தை கலக்க படுத்தாமல் இருந்தது.

இப்பொழும் எனக்கு ஞாபகம் இருக்கிறது அன்று வந்த அந்த கடிதம் இந்த சம்பவத்தை சுமந்த  படி...

வாழ்க்கை சம்பவம் இன்னும் பல ........


2 comments:

  1. நதியை பார்த்தால் ஒரே ரத்தம், என் வாயிலேர்ந்துதான்.. கவலையான சூழ்நிலையையும் மீறி ரசிக்க வைக்கும் எழுத்து.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா ஞாபகம் வருகிறது...
    நிறைய வரட்டும்..

    ReplyDelete