அப்பா..... உன்னை பற்றி சொல்ல நான் எதிலிருந்து ஆரம்பிப்பது...
தமிழில் வார்த்தைகள் போதாதே!
எனக்கு எழுத கூட தெரியுமா? இப்போது எழுதுவது கூட புலமையால் அல்ல, ஏதோ என் மனதில் வருவதைத்தான்.
என் அப்பா என்றால் சுறுசுறுப்பு, தைரியம், குழந்தைத்தனம்,சத்தியம், உற்சாகம், பாரதியார் பக்தன், பெண் விடுதலை என்று பல இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
சுறுசுறுப்பு என்றால் எப்பொழுதும் எறும்பு போல் இருக்க வேண்டும் என்பார். அவரும் அப்படியே, என் அப்பாவை நான் என்றும் தளர்ச்சியுடன் பார்த்ததே கிடையாது . எப்பொழுதும் உற்சாகம், எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் நேர்கொண்ட பார்வை. உன்னுடைய நகைச்சுவை உணர்விற்கு அளவே இல்லை.
பிறந்ததோ திம்மக்குடி, 10 வயதில் சென்னை இடமாற்றம்.
சென்னையில் சிறுவயதிலேயே பாரதியார் கொள்கைகளால் ஈர்க்க பட்டு பத்திரிகை துறையில் பகுதி நேர பணியில் சேர்ந்தாய். "சுதேசி மித்திரன்" பத்திரிகையில் சப் எடிட்டராக வேலை. "கம்யூனிஸ்ட்" கட்சியில் தீவிரம், திரு. பாவேந்தர் பாரதிதாசனுடன் 10 நாட்கள் பாண்டிச்சேரியில் . இப்படியெல்லாம் சொல்லி கேள்வி....
திருமணம் ஆகி அண்ணா பிறந்தவுடன், பத்திரிகையில் வருமானம் போதாமல் விற்பனை துறையில் காலடி பதித்தாய்... அப்பொழுதும் உங்கள் எழுத்து பணியை நிறுத்திவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மிக இலக்கியத்தையும் படிக்கச் ஆரம்பித்து, அதிலும் உங்கள் எழுத்து திறமையை காட்ட ஆரம்பித்தாய். "காரல் மார்ஸ்" புத்தகத்தை படித்த நீங்கள் திருவாசகத்தையும் படித்து குடித்தீர்கள்.
உங்களை.. உங்கள் நினைவுகளை.. உங்கள் புத்தகங்களை... அடுத்தடுத்து பகிர்கிறேன்..
Good start... expecting more...
ReplyDeleteSure
DeleteWow. Very nice narration about your Father. Our feelings of our fathers r always sweet memories na. Well done Kalyani. Keep it up.
ReplyDeleteS madam. Thank you so much for your word of encouragement
ReplyDelete