Friday, April 24, 2020

குண்டாபுர (மங்களூர்) ரயில் நிலையத்தில்..

என் அப்பா என்னுடன் பகிர்ந்த வாழ்க்கை சம்பவங்கள் :-

சம்பவம் 1:-

1980 இல் நடந்தது.

நல்ல காற்று, மழை, இடி, குண்டாபுர (மங்களூர்) ஸ்டேஷனில் நான் (அப்பா) நிற்கிறேன். மின்சாரம் இல்லை. ஸ்டேஷன் மாஸ்டர் இன்றைக்கு இரவு ட்ரெயின் வராது என்று சொல்லி தன் அறையை பூட்டி கொண்டு போய் விட்டார்.

நான் ஒருவன் மட்டும் என் கால்களுக்கு இடையில் இரண்டு பெட்டிகளையும் வைத்து கொண்டு ஸ்டேஷனில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து இருக்கிறேன். ஒரு பெட்டியில் ஆபீஸ் கேஷ், இன்னொரு பெட்டியில் என் உடமைகள்.... அப்பொழுது மின்னலுக்கு இடையில் ஒரு உருவம் அடர்ந்த தாடியுடன் என் முன்னால் நின்று என்னையே பார்த்து கொண்டு இருந்தான். சரியாக பார்ப்பதற்குள் மின்னல் நின்று விட்டது... குமிருட்டு ...


உடனே நான் என் பெட்டிகளை இன்னும் நன்றாக பற்றிக்கொண்டு,  தீர்க்கமாக எந்த ஒரு பயமும் இல்லாமல் மின்னல் வந்த இடத்தையே பார்த்தேன். இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது, அவனும் என்னையே பார்த்தான். உடனே நான் உரத்த குரலில், யார்டா, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவன் எதுவுமே பதில் சொல்லாமல் ஓடி விட்டான். அன்று இரவு நான் தன்னந்தனியே ஸ்டேஷனிலேயே உறங்கினேன்.

விடிய காலை ஸ்டேஷன் மாஸ்டர் வந்து அவர் அறை திறக்கும் சத்தம் கேட்டு தூக்கம் களைந்தேன்.

என்ன சார், இங்கேயே தூங்கிட்டிங்களா? என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். ஆமாம் என்று சொல்லி நேற்று நடந்த சம்மதத்தை ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொன்னேன்.

ஓ அப்படியா... அவன் வேற யாரும் இல்லை சார், ஒரு பைத்தியம். இங்கதான் சுத்திகிட்டு இருப்பான் என்றார்.

உடனே இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான் "அப்பா  உனக்கு பயம்வே இல்லையா" என்றேன்.

அப்பொழுது அவர் சொன்னார், வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் தைரியத்தை மட்டும் விட்டுவிட கூடாது என்று.

இப்படி தன் வாழ்க்கை பாதையில் தான் எதிர் கொண்ட பல சம்பவங்களை எப்பொழுதும் சொல்வார்... அது ஏராளம்.

இன்னும் வரும்............ 

4 comments:

  1. He has helped me a lot especially when I joined BE in Salem, even came to my college once on Day 1 and stopped a senior from ragging me in the bus. He has lot of physical help to us.

    ReplyDelete
  2. Thairiyam.. athane ellam...

    ReplyDelete