Tuesday, May 19, 2020

Short Story on Diwali.... Impact of last post :)

தீபாவளியும் கோ லைவ்வும்...

பொற்கொடி நல்ல தமிழ் பெயர்..... இவர்தான் நம் கதாநாயகி. இவர் ப்ராஜெக்ட் மானேஜராக ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலையில் இருக்கிறார்.
பொற்! ப்ராஜெக்ட் ஷுட் கோ லைவ் 20th அக்டோபர். சோ ஜஸ்ட் டூ தி டெவலப்மென்ட் பாஸ்ட். வி நீட் டு டெலிவர் இட் ஆன் டைம் என்றார் ப்ராஜெக்ட் டைரக்டர்.
ஸுயூர் சார் என்று சொல்லி வெளியே வந்தாள் பொற்.

டீம் மீட்டிங் அர்ரேன்ஜ் பண்ணி அனைவரிடமும் விஷியத்தை சொல்லி., இன்னும் 15 நாட்களே இருக்கிறது... ஸ்டாண்டப் கால் வில் பி பிரம் மீ பார் 10-15 மினிட்ஸ் டெய்லி. வி நீட் டு கிவ் அவர் 100% டு மேக் திஸ் ப்ராஜெக்ட் success! என்றால் பொற்.


கைபேசி சீனுகியது .... அரவிந்த், பொற் கணவர்.... சொல்லுமா என்றாள். எனக்கு இன்னிக்கு லேட்டா ஆகும். குட்டிமாவை ( இவர்களின் செல்ல மகள் சஞ்சனா - மூன்று வயது )கிரஷ்லர்ந்து கூப்பட முடியாது என்றான்.
சரி பரவாயிலை நான் என் பிரெண்டு ப்ரியாவை அனுப்பி கொஞசம் கூட்டிண்டு வர சொல்லறேன், ஏன்னா எனக்கும் இங்க வேலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. Project கோ லைவ் 20th என்றாள்.
சரி முடியுமா இல்லேன்னா சொல்லு நான் போக முடியுமான்னு ட்ரை பண்ணி பார்க்கறேன் என்றான்.
நோ நோ... ஐ வில் டேக் கேர் என்று சொல்லி மொபைலை கட் செய்து ப்ரியாக்கு போன் பண்ணி பார்க்கலாம் என்று டயல் செய்வதற்குள் அண்ணா பண்ணினார்.
பொற் நான் பெங்களூரு வந்திருக்கேன்.... நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு.
அண்ணா நான் ஆபீஸ்ல இருக்கேன் நீங்க குட்டிமாவை கிரஷிலேர்ந்து கூட்டிட்டு வீட்டுக்கு போய்டுங்க., நான் வர லேட்டா ஆகும். பிரிட்ஜ்ல மாவு இருக்கு., தோசை ஊத்தி சாப்பிட்டுக்கோங்க என்றாள். சரிம்மா நான் பார்த்துக்கறேன் என்றார். சாவி எங்க இருக்கு என்றார். எப்போதும் போல பக்கத்துக்கு வீட்டில ஒரு கீ இருக்கு அண்ணா என்றாள்.
பொற் வீட்டுக்கு வரவே 11 மணி ஆகி விட்டது. குழந்தை தூங்கி போயிருந்தாள். அரவிந்த் இன்னும் வர வில்லை. என்னடா ரொம்ப வேலையா என்று பரிவுடன் கேட்ட அண்ணாவை பார்த்து ஆமாம் அண்ணா நீங்க சாப்டீங்களா சென்னைல எல்லாரும் எப்படி இருக்காங்க என்றாள்.
அரவிந்துக்கு கால் பண்ணினாள்.... பொற் மார்னிங் ஆயிடும் நான் வர என்றான். ஓகே குட் நைட் என்று சொல்லி போனை வைத்தான்.
காலை எழுந்து பார்த்தால் அண்ணா காபி போட்டு கொண்டிருந்தார்... ஏண்ணா நீங்க பண்ணிட்டு நான் பண்ண மாட்டேன்னா என்று சொல்லி கொண்டே காப்பியை பருகினாள்.


பொற் தீபாவளிக்கு என்ன பிளான் எப்போ வர்றேங்க என்றார். தெரியலை அண்ணா ஆனா ஒரு விஷயம் எனக்கு கோ லைவ் 20th அதனாலே ப்ராஜெக்ட் தீபாவளிக்குள் முடிஞ்சிடும் அரவிந்தும் ஓன் வீக்ல பிரீயாகிடுவார் ... ஒரு வாரம் லீவு போட்டுட்டு வந்துடறோம் என்றாள்.
அப்போ ஒன்னு பண்ணறேன் பொற்., பேசாம்மா குட்டிமாவை நான் ஊருக்கு கூட்டிண்டு போய்டறேன்... அவளும் அந்த பாட்டி இந்த பாட்டி என்று ஒரு 15 நாட்கள் இருக்கட்டுமே  (இரண்டு பேர் வீ டும் பக்கத்து பக்கத்து வீடு).... இங்கு உனக்கும் அரவிந்துக்கும் இப்போ வேலை ஜாஸ்தி... குழந்தை பாவம் என்றார் அப்பொழுது அரவிந்தும் ஆமாம் பொற் எங்க அம்மாகூட குட்டிமாவை சென்னை அனுப்பு, தீபாவாளிக்கு வரும் பொது கூட்டிண்டு போங்கனு சொன்னாங்க என்றான். சரி நம்பத்தான் 4 நாளுக்கு முன்னாடியே போகப்போறோம் என்று அண்ணாவுக்கு சரி என்றால்... குட்டிமாவும் குதித்து கொண்டு போய் விட்டாள்.
ஆபீஸ் பரபரப்பு.... மெயில் செக் பண்ணினால் கிளைன்ட் கால் அட் 11 என்று இருந்தது. சின்ன சின்ன மாற்றங்கள் சொன்னார்கள். நாங்களும் அதை மாற்றி செய்தோம். கிளைன்ட் கால், டீம் கால், என்று நேரம் தவிர ப்ராஜெக்ட் அப்டேஷன் என்னுடைய வேலை என்று ரொம்பவே ஓய்வு இல்லாமல் வேலை இருந்தது.
இப்படியே ஒரு வாரம் போனது.. கோ லைவ் இன்னும் 4 நாட்களே இருக்கும் பட்சத்தில் 40% ஒர்க் மாற்ற சொன்னது இன்னும் டீம் மெம்பெர்ஸ் இடையே ஏரிச்சலை தந்தது... பொற்! நம்ப எவளோ குறுகிய நாட்களா இந்த ப்ராஜெக்ட் கோ லைவ் பண்ண முடியாது சோ எக்ஸ்ட்டென்ஷன் வேண்டும் என்றார்கள்.
பொற்கு இந்த ப்ராஜெக்ட் எப்படியாவது சக்ஸஸ் பண்ணனும். சக்ஸஸ் பண்ணினா 4 வருஷம் ப்ராஜெக்ட் இந்த கம்பனிக்கு சைன் ஆயிடும் என்று தெரியும்.
பொற் ப்ராஜெக்ட் டைரக்டரிடம் இது பற்றி பேசினாள். தேதி மாற்றம் வேணும் சார் கோ லைவுக்கு என்றாள். நெறைய மெயில் சைனுக்கு பிறகு 26 அக்டோபர் கோ லைவ் என்று தீர்மானம் ஆனது.
பொற்க்கு ஒரு பக்கம் கோ லைவ் இன்னொரு பக்கம் தீபாவாளிக்கு ஊருக்கு போகணுமே என்ற டென்ஷன். 26th கோ லைவ் முடித்து எப்படி 27th தீபாவளிக்கு ஊருக்கு போக முடியும் என்று கவலை. ஆனால் வேலை டென்ஷனில் தீபாவாளி பற்றி நினைப்பை மறந்தே போனாள்.
அரவிந்த் தீபாவளிக்கு டிக்கெட் புக் பண்ணறேனு சொன்னபோது கூட பதில் சரியாக சொல்லவில்லை ஏன்னா ப்ராஜெக்ட் சக்சஸ்புல் ஆகணும்னு வெறியில் வேற எந்த நினைப்பும் இல்லை.
டீமுக்கு நிறைய ஊக்கம் கொடுத்தாள். நியூ ஐடியாஸ் நிறைய பகிர்த்தாள். 26th நெருங்க நெருங்க இரவு பகல் பார்க்காமல் வேலையில் மூழ்கினாள்.
26th கோ லைவ் ஸ்டார்ட் ஆனது.... ஒவ்வொன்றாக விவரித்து கொண்டே போனாள். கிளைன்ட் பக்கத்துலேருந்து பெரிய கைத்தட்டல் கிடைத்தது. ப்ராஜெக்ட் சக்சஸ் என்று என் ப்ராஜெக்ட் டைரக்டர் பிக் applause டு யு பொற் என்றார். Thank You சார் என்று சொல்லி விட்டு தன் டீம் மெம்பெர்ஸுக்கு நன்றியையும் பிக் பார்ட்டி ப்ராமிஸ் என்று ஊக்கம் கொடுத்து மெயில் செய்து டைம் பார்க்கையில் மணி இரவு 12. அம்மா அத்தை போன் செய்த போது கூட போன் எடுத்து பேசவில்லை.
நாளை காலை தீபாவளி. பொற்க்கு வீட்டு நினைப்பு வந்தது. பிளைட்ல டிக்கெட் செக் பண்ணினாள் மார்னிங் 9 மணி பிளைட் தான் இருந்தது.என்ன பண்ணறது என்று யோசித்தபடி காரை வீட்டுக்கு ஓட்டினாள்.


அரவிந்துக்கு போன் செய்தாள்.
சொல்லுடா பொற் ... என்ன ப்ரோஜெக்ட் லைவ் எப்படி போச்சு? successah என்றான்.
ப்ராஜெக்ட் டபுள் சக்ஸஸ்த்தான் அரவிந் ஆனா நம்ப ஊருக்கு போக முடியாதே அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு என்றாள்.
கவலை படாதே வீட்டுக்கு வா என்று சொல்லி போனை வைத்தான்.
பொற் வீட்டுக்குள் நுழையும் போதே வீடு லைட் அலங்காரம் பண்ணி பிரகாசமாக இருந்தது. ... அரவிந்தா இவ்வளோ பண்ணி இருப்பான் என்று எண்ணி கொண்டே போன அவளுக்கு ஒரே ஆச்சரியம்.! வீட்டுக்குள் அம்மா, அப்பா, அத்தை, மாமா, அண்ணா, அண்ணி, குழந்தைகள் என்று அனைவரும் இருந்தார்கள். குட்டிமா ஓடி வந்து கட்டி கொண்டாள்.
எல்லாம் அரவிந்த் பிளான் தான் பொற் என்று அப்பா சொன்னார். நாங்க எல்லாரும் மத்தியானம் வந்துட்டோம். உனக்கு surprise.
பொற் அரவிந்தை ஆனந்த கண்ணீர் மல்க wonderful ஐடியா. Thank you என்று சொன்னவளுக்கு, கூல் என்று சொன்னான்.


அனைவரும் ஹாப்பி தீபாவளி என்று கோஷம் போட்டார்கள்.
கல்யாணி கிருஷ்ணன்
9989237712
சுபம்.

2 comments:

  1. அருமை...அழகான நடை...யதார்த்தம்...finally a happy twist👏👏👏

    ReplyDelete