Thursday, August 20, 2020

விடியலும் வந்ததே

“Meet me tomorrow at 4pm” என்று அரவிந்தின் பள்ளி ஆசிரியரிடமிருந்து Whatsapp செய்தி வந்ததிலிருந்து சுவாதிக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது.அரவிந்திடம் உடனே கேட்கலாம் என்றால் அவன் Chemistry tuition க்கு போயிருந்தான். அவன் வந்தவுடன், மெதுவாக அவனிடம் கேட்டாள் " என்னம்மா ஸ்கூலில் விஷயம் என்று கேட்டாள்" அவனும் "ஒண்ணும் இல்லம்மா, எல்லாம் நல்லாதான் போறது" என்று சொல்லிவிட்டான். 




ஆங்... உங்களிடம் சொல்லவில்லையே. அவன் இப்போது +1 படித்துக் கொண்டிருக்கிறான். நல்லபையன்தான். எதுக்கு இந்தசெய்தி என்று சுவாதியின் சிந்தனை அதிலேயே இருந்தது. வெங்கட் ஆபிசிலிருந்து வந்ததும் சுவாதி விஷயத்தை சொன்னாள். வெங்கட்டும் நாளைக்குப் போய்ப் பார்க்கலாம் என்றுகூலாக சொல்லிவிட்டான். 

மறுநாள் அரவிந்தின் பள்ளி…… சுவாதியும் கல்லூரியிலிருந்து நேராக பள்ளிக்கு மூணரை மணிக்கே வந்துவிட்டாள். 
அவள் ஒரு கல்லூரியில் பகுதி நேரஆசிரியை. வெங்கட்டும் நேராக சரியாக நான்கு மணிக்கு வந்துவிட்டான். 

வகுப்பறை அருகில் சென்றவுடன்தான், அங்குஇன்னும் பாத்து பனிரெண்டு பெற்றோர்களும் வந்திருக்கிறார்கள் என்று. எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை. 

ஆசிரியை உள்ளே அழைத்தார். சுவாதியும் வெங்கட்டும் உள்ளே சென்றமர்ந்தனர். ஆசிரியை புன்சிரிப்புடன் "ஒங்க பைய்யன் நல்லா படிக்கிறான். அதனால அவன State rank வாங்கற அளவுக்கு Train பண்ணப் போறோம்" அதைக் கேட்ட சுவாதிக்கு அப்பாடா என இருந்தது. "மேலும் தொடர்ந்தார் ஆசிரியை "அதற்கு உங்கள் ஒத்தொழைப்பும் வேண்டும் என ஆரம்பித்தார்" உடனே இருவரும் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டனர். அதற்கு ஆசிரியை "நாங்கள் இந்த வருஷம் முழுசும் +2 பாடமே எடுத்து முடித்து விடுவோம். அடுத்த வருஷம் மீண்டும் மீண்டும்அதே பாடத்தை நன்றாகப் பயிற்சி கொடுப்போம். அதனால் நீங்க வீட்டுலகூட +2 பாடம் மட்டுமே concentrate பண்ணுங்க" என்றார். அவர்கள் இருவரும் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தனர். "

அரவிந், நீ நீட் எக்ஸாமில் ஸ்டேட் ரேங்க் வாங்கிருக்கே" என்று வெங்கட் சந்தோஷத்தில் குதித்தார். அம்மாவின் கண்களில்ஆனந்தக் கண்ணீர். அப்பொழுது அரவிந்தின் சிந்தனை பின்னோக்கிப் போனது. "அன்று பள்ளியிலிருந்து நானும் என் பெற்றோரும் சேர்ந்தே வந்தோம். அப்பா என்னிடம் விஷயத்தை சொன்னார். அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்டார். நானும், அப்பாவிடம் +1 பாடம் படிக்காமல் +2 சிலபஸ் புரியாதுஎன்றேன். அடிப்படை +1ல் தான் இருக்கு என்று சொன்னேன். அதற்க்கு அம்மாவும் +1 அடிப்படை சொல்லிதர்றேன் ஆனாலும்ரெண்டும் மேனேஜ் பண்ணறது கஷ்டம் என்றாள். 
"நானும் அதை என்னிடம் விட்டு விடு என்று சொன்னது மட்டும் இல்லாமல், வீட்டிற்கு வந்து முதல் வேலையாக என்முகநூலில், இரண்டு வருடம் கழித்துப் பார்ப்போம் என்று ஸ்டேட்டஸ் போட்டேன். "அன்று முதல் நான் வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுடன் +1 பயிற்சி. பிறகு டியூஷனில் +2 பாடம் என தீவிரமாக உழைத்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், அடிப்படை +1 இருந்ததால் +2 படிப்பு ஈசியாக இருந்தது. இப்படித்தான் இரண்டு வருடங்கள்உருண்டோடியது"  

“அரவிந்த்” என்று சுவாதி கூப்பிட்டாள். சுவீட்டுடன் வந்து நின்றாள். அரவிந்த் சிந்தனை களைந்தான். "அன்று மட்டும் அவர்கள் பள்ளியின் பேச்சைக் கேட்டு என்னை ப்ரெஷர் பண்ணி இருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா? இன்றோ நான் மட்டும் தான் நீட்டில் தேர்வாகியிருக்கிறேன்" என்று அவன் நினைக்கும் பொது அவன் கண்களில் வந்த கண்ணீர்பல உண்மைகளை உணர்த்தியது சுவாதிக்கு வெங்கட்டுக்கும்.

Monday, August 17, 2020

கிருஷ்ண ஜெயந்தி கலாட்டா

எல்லாரும் கிருஷ்ணா ஜெயந்தி இந்த ஆண்டு 2020 நன்றாக கொண்டாடினீர்களா? 

ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு பல நினைவுகளை ஞாபகப்படுத்தும். 
அதில் எனக்கு கிருஷ்ணா ஜெயந்தியும் ஒன்று. 


காலையிலேயே அம்மாமார்கள் எழுந்து, சமையலை முடித்து விடுவார்கள். ஏன்னென்றால் கிருஷ்ணருக்கு பட்சணம் செய்ய வேண்டுமே ! திரட்டி பால், லட்டு, முறுக்கு, தேன்குழல், தட்டை , வெல்ல சீடை, உப்பு சீடை. பிறகு மற்ற பலகாரங்கள் . இதில் எல்லா அம்மாக்களுக்கும் சவாலாக இருப்பது சீடை, அதிலும் உப்பு சீடை. இதற்காக ஒரு அவசர கூட்டம் நடக்கும். சீடை பண்ணும்போது மட்டும் கொஞ்சம் நான் கூப்படறேன் வந்துட்டு போங்கோ... மதியம் 2 மணி அளவில் காலணி அம்மக்கள் இடையே நெறைய நடமாட்டங்கள் இருக்கும்... அவங்க எங்க வீட்டுக்கு வரதும், எங்க அம்மா அவங்க வீட்டுக்கு போறதுமாக.... சீடை பண்ணும் நேரம் அது.  
குழந்தைகள் நாங்க எல்லாம் 3 மணியளவில் எங்கள் டிரஸ், சிகை அலங்காரம் எல்லாம் ரெடியாக எடுத்து வைத்து கொள்வோம். கிருஷ்ணர், ராதை, என்று வேடம் அணிந்து கொள்ள. 4 மணியிலேர்ந்து வாசலில் இழை கோலம் போட ஆரம்பித்து விடுவார்கள் அக்காக்கள்... கிருஷ்ணர் கால் போடும் போது அது காய்கிறவரை யாரும் நடக்க கூடாது என்று நிபந்தனை. அடுத்து நாங்கள் எல்லாரும் அலங்காரம் பண்ணி ரெடியாவோம் பூஜைக்கு. 

காலனியில் ஒரு வீட்டில் இருக்கும் கிருஷ்ணர் விக்கிரகம் துளசி யின் கீழ் வைத்து பொதுவாக, பூஜை ஆரம்பமாகும். அங்கேயே பிரசம் நெய்வேத்தியம் என்று சொன்னால் எல்லார் வீட்டில் இருந்தும் பட்சங்கள் எடுத்து வந்து பல ஆகரங்களாக அவருக்கு நெய்வேத்தியம் நடக்கும். 

பஜனை, கிருஷ்ணர் பாடல்கள் என்று வெகு ரம்யமாக போகும்.... ஆடல் பாடல் நாங்கள் செய்வோம். அதில் கட்டாயமாக இடம் பெரும் பாடல்கள் சில.... மாடு மேய்க்கும் கண்ணா,  அலை பாயுதே கண்ணா,  புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,  கண்ணா நீ பேகமாய் வாராய் இறுதியாக இடம் பெரும் பாடல் " குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ".... எங்களோட ஆடல் முடிந்தவுடன் எங்கள் கண்கள் எல்லாம் எல்லார் வீட்டு ப்ரசாதங்களிலேயே இருக்கும். அதற்காகவே, எங்களையும் பஜனை பாடல்களை கத்தி பாட சொல்லுவார் விச்சு அப்பா. அவர்தான் அங்கே ஆஸ்தான வாத்தியார். எல்லார் கையிலும் ஸ்வீட்ஸ் கொடுத்து " க்ருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லி வாயில் போட்டுக்க சொல்லுவார். அப்ப்பா ஒரு வழியாக பூஜை முடித்தது என்று நாங்கள் எல்லாரும் அப்படியே அமர்ந்து கொள்வோம். 

இலையில் அழகாக பாயசம், அப்பம், வடை, சுண்டல் , புளியோதரை, வெண்ணை போட்ட தயிர் சாதம், என்று பரிமாற நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே சாப்பிட்டு, சில குழந்தைகள் அலங்காரம் கலைக்காமலே  உறங்கி விடுவோம். இந்த உப்பு சீடை சம்பாஷணை ஒரு வாரம் எங்கள் அம்மக்கள் இடையே தொடரும். 

இப்படியாக போகும் நான் பார்த்த சிறு வயது கிருஷ்ணா ஜெயந்தி. 
இன்றும் நான் அதை அசைபோட்டவண்ணம் ஓவ்வொரு ஸ்னாக்ஸ் அண்ட் சுவீட்ஸ் செய்தேன். இதே மாதிரி பண்டிகைகள் செய்வது நம் பாரம்பரியம் என்றாலும் அது ஒரு சந்தோஷத்தை, உற்சாகத்தை நம்முள் உண்டாக்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. 

 A Break from our routine.

Thursday, June 18, 2020

SOME OF MY FATHER'S BOOK

குழந்தைகளுக்கான மின்மினிக் கதைகள்!

முதற்படைப்பு : 1973
எழுதியவர் : கு. வரதராஜன்  
சென்னை - 1
வெளியிட்டவர் : வீர லட்சுமி பதிப்பகம்.

உரிமை

மண்டியிட்டு வாழ்வதை விட
மடிவதுமேல் - மாஜினி.


  



Wednesday, June 3, 2020

மனிதர்கள் பலவிதம்

யானைக்கும் அடி சறுக்கும்....... குடூரில்

அப்பாவின் அனுபவத்தில் இருந்து ...  1974

குடூர்  ஸ்டேஷனில் என் அப்பா சென்னை ரயிலுக்காக காத்து கொண்டு இருக்கிறார். இன்னொருவனும் பக்கத்தில் வந்து உட்காருகிறான்.....

இனி வருபவை நாம் நேரில் பார்ப்பது போல்....

வந்தவன் : " சென்னை ரயிலுக்கா? அப்பாவை பார்த்து

அப்பா : ஆமாம்... செய்தித்தாளில் முழுங்கினேன்.

வந்தவன் : சார், எனக்கு ஒரு பேப்பர் கொடுங்க

அப்பா கொடுக்கிறார்.

சிறிது  நேரத்தில் " சார் நான் கொஞ்சம்  பாத்ரூம் போயிட்டு வந்துடறேன். என்னோட பெட்டியை பாத்துக்கோங்க என்றான். சரி என்றேன்.

சிறிது நேரத்தில் வந்து விட்டான். ரொம்ப நன்றி என்று சொன்னான்.

நேரத்தை பார்த்தேன் இன்னும் ரெயில் வர அரை மணி நேரம் இருந்தது, ... அவரை பார்த்தேன்.

நானும் போயிட்டு  வரேன் கொஞ்சம் என்னோட பெட்டியை பார்த்துக்கோங்க என்றேன்... சரி சார் என்றான்.

நான் வந்து பார்க்கிறேன், ஆளையும் காணலை பெட்டியையும் காணலை. பக்கத்துல இருக்கறவங்ககிட்ட கிட்ட கேட்டா தெரியாதுன்னு சொல்லிட்டாங்க...

பெட்டியில் ஆபீஸ்  பணம் 200ரூ , கோப்புகள் மற்றும் என் துணிமணிகள் இருந்தது. நல்ல வேலையாக என் பர்சில் 200 ரூபாய் இருந்தது. ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

யாரையும் லேசில் நம்பாத என்னையே ஏமாற்றி விட்டானே என்று நினைத்து கொண்டேன். இதுதான் யானைக்கும் அடி சறுக்கும் என்பதோ?

அதே ரயில்வே ஸ்டேஷன். 1982

நான் ரயிலுக்காக waiting ....

ஒருவர் என்னை பார்த்து... சார் ஒரு request நான் பெங்களூரு போகணும். வழில பர்ஸ் பிக் பாக்கெட் ஆயிடுச்சு... நீங்க எனக்கு ஒரு 300 ரூபாய் கொடுத்தீங்கனா ஊர் போய் சேர்ந்துடுவேன். உங்களோட அட்ரஸ் சொல்லுங்க மணிஆர்டர் பண்ணிடறேன் என்றார். அவர் தமிழ் தெரியாதனால் இங்கிலீஷில் தடுமாறி பேசினார்.

சிறிது நேரம் யோசித்தேன்... என்னிடம் 1000 ரூபாய் இருந்தது. சரி சார் உங்களுக்கு தரேன். உங்ககிட்டேர்ந்து எனக்கு பணம் திரும்ப வருமான்னு தெரியாது, நானும் எதிர் பார்க்கலை , ஏதோ உங்களுக்கு help பண்ணனும்னு தோணறது பண்ணறேன் என்று சொல்லி 300 ரூபாயை கொடுத்தேன். அவருக்கு முகத்தில்  அவ்ளோ சந்தோசம். வலுக்கட்டாயமாக தன்  அட்ரஸ், பெயர் எழுதி தந்தார் என்னோட அட்ரஸ்  எழுதிக்கொண்டு உங்களுக்கு கண்டிப்பா நான் பணம் அனுப்பிடறேனு சொன்னார்.

இதை வீட்டில் வந்து சொன்ன உடன் என் அம்மா குடூர்ல விட்டது ஞாபகம் இல்லையா? இந்த 300 ரூபாயும் போச்சு என்றார்.

அதை பற்றி மறந்தே போனோம்.

எண்ணி 15 நாட்களில் மணி  ஆர்டர்... போஸ்ட்மேன் கத்தினான் யாரு என்று பார்த்தால் சிக்மகளூரில் இருந்து நரசிம்ம பட்.... 300 ரூபாய் மணி ஆர்டர். அதில் அவர் " மனித நேயம் இன்னும் அழியவில்லை " நீங்கள் மட்டும் அன்று எனக்கு உதவ வில்லை என்றால் " I would have suffered " Thanks a Million " we will continue our friendship " என்று சொன்னது மட்டும் இல்லாது  He used to send greetings for all festivals.

இதை ரயில் சிநேகம் என்றும் சொல்லலாமா?





Tuesday, May 19, 2020

Short Story on Diwali.... Impact of last post :)

தீபாவளியும் கோ லைவ்வும்...

பொற்கொடி நல்ல தமிழ் பெயர்..... இவர்தான் நம் கதாநாயகி. இவர் ப்ராஜெக்ட் மானேஜராக ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலையில் இருக்கிறார்.
பொற்! ப்ராஜெக்ட் ஷுட் கோ லைவ் 20th அக்டோபர். சோ ஜஸ்ட் டூ தி டெவலப்மென்ட் பாஸ்ட். வி நீட் டு டெலிவர் இட் ஆன் டைம் என்றார் ப்ராஜெக்ட் டைரக்டர்.
ஸுயூர் சார் என்று சொல்லி வெளியே வந்தாள் பொற்.

டீம் மீட்டிங் அர்ரேன்ஜ் பண்ணி அனைவரிடமும் விஷியத்தை சொல்லி., இன்னும் 15 நாட்களே இருக்கிறது... ஸ்டாண்டப் கால் வில் பி பிரம் மீ பார் 10-15 மினிட்ஸ் டெய்லி. வி நீட் டு கிவ் அவர் 100% டு மேக் திஸ் ப்ராஜெக்ட் success! என்றால் பொற்.


கைபேசி சீனுகியது .... அரவிந்த், பொற் கணவர்.... சொல்லுமா என்றாள். எனக்கு இன்னிக்கு லேட்டா ஆகும். குட்டிமாவை ( இவர்களின் செல்ல மகள் சஞ்சனா - மூன்று வயது )கிரஷ்லர்ந்து கூப்பட முடியாது என்றான்.
சரி பரவாயிலை நான் என் பிரெண்டு ப்ரியாவை அனுப்பி கொஞசம் கூட்டிண்டு வர சொல்லறேன், ஏன்னா எனக்கும் இங்க வேலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. Project கோ லைவ் 20th என்றாள்.
சரி முடியுமா இல்லேன்னா சொல்லு நான் போக முடியுமான்னு ட்ரை பண்ணி பார்க்கறேன் என்றான்.
நோ நோ... ஐ வில் டேக் கேர் என்று சொல்லி மொபைலை கட் செய்து ப்ரியாக்கு போன் பண்ணி பார்க்கலாம் என்று டயல் செய்வதற்குள் அண்ணா பண்ணினார்.
பொற் நான் பெங்களூரு வந்திருக்கேன்.... நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு.
அண்ணா நான் ஆபீஸ்ல இருக்கேன் நீங்க குட்டிமாவை கிரஷிலேர்ந்து கூட்டிட்டு வீட்டுக்கு போய்டுங்க., நான் வர லேட்டா ஆகும். பிரிட்ஜ்ல மாவு இருக்கு., தோசை ஊத்தி சாப்பிட்டுக்கோங்க என்றாள். சரிம்மா நான் பார்த்துக்கறேன் என்றார். சாவி எங்க இருக்கு என்றார். எப்போதும் போல பக்கத்துக்கு வீட்டில ஒரு கீ இருக்கு அண்ணா என்றாள்.
பொற் வீட்டுக்கு வரவே 11 மணி ஆகி விட்டது. குழந்தை தூங்கி போயிருந்தாள். அரவிந்த் இன்னும் வர வில்லை. என்னடா ரொம்ப வேலையா என்று பரிவுடன் கேட்ட அண்ணாவை பார்த்து ஆமாம் அண்ணா நீங்க சாப்டீங்களா சென்னைல எல்லாரும் எப்படி இருக்காங்க என்றாள்.
அரவிந்துக்கு கால் பண்ணினாள்.... பொற் மார்னிங் ஆயிடும் நான் வர என்றான். ஓகே குட் நைட் என்று சொல்லி போனை வைத்தான்.
காலை எழுந்து பார்த்தால் அண்ணா காபி போட்டு கொண்டிருந்தார்... ஏண்ணா நீங்க பண்ணிட்டு நான் பண்ண மாட்டேன்னா என்று சொல்லி கொண்டே காப்பியை பருகினாள்.


பொற் தீபாவளிக்கு என்ன பிளான் எப்போ வர்றேங்க என்றார். தெரியலை அண்ணா ஆனா ஒரு விஷயம் எனக்கு கோ லைவ் 20th அதனாலே ப்ராஜெக்ட் தீபாவளிக்குள் முடிஞ்சிடும் அரவிந்தும் ஓன் வீக்ல பிரீயாகிடுவார் ... ஒரு வாரம் லீவு போட்டுட்டு வந்துடறோம் என்றாள்.
அப்போ ஒன்னு பண்ணறேன் பொற்., பேசாம்மா குட்டிமாவை நான் ஊருக்கு கூட்டிண்டு போய்டறேன்... அவளும் அந்த பாட்டி இந்த பாட்டி என்று ஒரு 15 நாட்கள் இருக்கட்டுமே  (இரண்டு பேர் வீ டும் பக்கத்து பக்கத்து வீடு).... இங்கு உனக்கும் அரவிந்துக்கும் இப்போ வேலை ஜாஸ்தி... குழந்தை பாவம் என்றார் அப்பொழுது அரவிந்தும் ஆமாம் பொற் எங்க அம்மாகூட குட்டிமாவை சென்னை அனுப்பு, தீபாவாளிக்கு வரும் பொது கூட்டிண்டு போங்கனு சொன்னாங்க என்றான். சரி நம்பத்தான் 4 நாளுக்கு முன்னாடியே போகப்போறோம் என்று அண்ணாவுக்கு சரி என்றால்... குட்டிமாவும் குதித்து கொண்டு போய் விட்டாள்.
ஆபீஸ் பரபரப்பு.... மெயில் செக் பண்ணினால் கிளைன்ட் கால் அட் 11 என்று இருந்தது. சின்ன சின்ன மாற்றங்கள் சொன்னார்கள். நாங்களும் அதை மாற்றி செய்தோம். கிளைன்ட் கால், டீம் கால், என்று நேரம் தவிர ப்ராஜெக்ட் அப்டேஷன் என்னுடைய வேலை என்று ரொம்பவே ஓய்வு இல்லாமல் வேலை இருந்தது.
இப்படியே ஒரு வாரம் போனது.. கோ லைவ் இன்னும் 4 நாட்களே இருக்கும் பட்சத்தில் 40% ஒர்க் மாற்ற சொன்னது இன்னும் டீம் மெம்பெர்ஸ் இடையே ஏரிச்சலை தந்தது... பொற்! நம்ப எவளோ குறுகிய நாட்களா இந்த ப்ராஜெக்ட் கோ லைவ் பண்ண முடியாது சோ எக்ஸ்ட்டென்ஷன் வேண்டும் என்றார்கள்.
பொற்கு இந்த ப்ராஜெக்ட் எப்படியாவது சக்ஸஸ் பண்ணனும். சக்ஸஸ் பண்ணினா 4 வருஷம் ப்ராஜெக்ட் இந்த கம்பனிக்கு சைன் ஆயிடும் என்று தெரியும்.
பொற் ப்ராஜெக்ட் டைரக்டரிடம் இது பற்றி பேசினாள். தேதி மாற்றம் வேணும் சார் கோ லைவுக்கு என்றாள். நெறைய மெயில் சைனுக்கு பிறகு 26 அக்டோபர் கோ லைவ் என்று தீர்மானம் ஆனது.
பொற்க்கு ஒரு பக்கம் கோ லைவ் இன்னொரு பக்கம் தீபாவாளிக்கு ஊருக்கு போகணுமே என்ற டென்ஷன். 26th கோ லைவ் முடித்து எப்படி 27th தீபாவளிக்கு ஊருக்கு போக முடியும் என்று கவலை. ஆனால் வேலை டென்ஷனில் தீபாவாளி பற்றி நினைப்பை மறந்தே போனாள்.
அரவிந்த் தீபாவளிக்கு டிக்கெட் புக் பண்ணறேனு சொன்னபோது கூட பதில் சரியாக சொல்லவில்லை ஏன்னா ப்ராஜெக்ட் சக்சஸ்புல் ஆகணும்னு வெறியில் வேற எந்த நினைப்பும் இல்லை.
டீமுக்கு நிறைய ஊக்கம் கொடுத்தாள். நியூ ஐடியாஸ் நிறைய பகிர்த்தாள். 26th நெருங்க நெருங்க இரவு பகல் பார்க்காமல் வேலையில் மூழ்கினாள்.
26th கோ லைவ் ஸ்டார்ட் ஆனது.... ஒவ்வொன்றாக விவரித்து கொண்டே போனாள். கிளைன்ட் பக்கத்துலேருந்து பெரிய கைத்தட்டல் கிடைத்தது. ப்ராஜெக்ட் சக்சஸ் என்று என் ப்ராஜெக்ட் டைரக்டர் பிக் applause டு யு பொற் என்றார். Thank You சார் என்று சொல்லி விட்டு தன் டீம் மெம்பெர்ஸுக்கு நன்றியையும் பிக் பார்ட்டி ப்ராமிஸ் என்று ஊக்கம் கொடுத்து மெயில் செய்து டைம் பார்க்கையில் மணி இரவு 12. அம்மா அத்தை போன் செய்த போது கூட போன் எடுத்து பேசவில்லை.
நாளை காலை தீபாவளி. பொற்க்கு வீட்டு நினைப்பு வந்தது. பிளைட்ல டிக்கெட் செக் பண்ணினாள் மார்னிங் 9 மணி பிளைட் தான் இருந்தது.என்ன பண்ணறது என்று யோசித்தபடி காரை வீட்டுக்கு ஓட்டினாள்.


அரவிந்துக்கு போன் செய்தாள்.
சொல்லுடா பொற் ... என்ன ப்ரோஜெக்ட் லைவ் எப்படி போச்சு? successah என்றான்.
ப்ராஜெக்ட் டபுள் சக்ஸஸ்த்தான் அரவிந் ஆனா நம்ப ஊருக்கு போக முடியாதே அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு என்றாள்.
கவலை படாதே வீட்டுக்கு வா என்று சொல்லி போனை வைத்தான்.
பொற் வீட்டுக்குள் நுழையும் போதே வீடு லைட் அலங்காரம் பண்ணி பிரகாசமாக இருந்தது. ... அரவிந்தா இவ்வளோ பண்ணி இருப்பான் என்று எண்ணி கொண்டே போன அவளுக்கு ஒரே ஆச்சரியம்.! வீட்டுக்குள் அம்மா, அப்பா, அத்தை, மாமா, அண்ணா, அண்ணி, குழந்தைகள் என்று அனைவரும் இருந்தார்கள். குட்டிமா ஓடி வந்து கட்டி கொண்டாள்.
எல்லாம் அரவிந்த் பிளான் தான் பொற் என்று அப்பா சொன்னார். நாங்க எல்லாரும் மத்தியானம் வந்துட்டோம். உனக்கு surprise.
பொற் அரவிந்தை ஆனந்த கண்ணீர் மல்க wonderful ஐடியா. Thank you என்று சொன்னவளுக்கு, கூல் என்று சொன்னான்.


அனைவரும் ஹாப்பி தீபாவளி என்று கோஷம் போட்டார்கள்.
கல்யாணி கிருஷ்ணன்
9989237712
சுபம்.